அன்னபூர்ணாவின் உருவ மெழுகு சிலையை அமெரிக்காவில் வசிக்கும் குடும்பராவின் மகள் சஸ்யா அவருக்கு பரிசாக அனுப்பி இருந்தார்.
குடும்ப ராவ் தனது மகள் சஸ்யா அளித்த விலைமதிப்பற்ற பரிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மாண்டவ குடும்ப ராவ் தனது மறைந்த மனைவி காசி அன்னபூர்ணா தேவியின் நினைவில் மூழ்கி இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இரவு அவரது வீட்டு வாசலுக்கு வந்த ஒரு விலைமதிப்பற்ற மற்றும் அரிய பரிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதாவது அன்னபூர்ணாவின் உருவ மெழுகு சிலையை அமெரிக்காவில் வசிக்கும் குடும்பராவின் மகள் சஸ்யா அவருக்கு பரிசாக அனுப்பி இருந்தார்.
அன்னபூர்ணா தேவி 2020 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது நினைவால் குடும்ப ராவ் மிகவும் சிதைந்தார். அவரது மனைவி விட்டுச் சென்ற வெற்றிடத்தை ஈடுகட்ட எதுவும் போதுமானதாகத் தெரியவில்லை. “என் மனைவி என் வாழ்க்கையின் ஒளி. தடிமனாக உடல் இருந்தாலும் மெல்லிய மனம் கொடவள். எனது வெற்றிகரமான வணிகத்திற்கு அவள் துணையாக இருந்தாள், ”என்று உணர்ச்சிவசப்படுகிறார் குடும்ப ராவ்.
அன்னபூர்ணா வீட்டில் வசித்த போது ஊஞ்சல் அவருக்கு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. "அதில் அமர்ந்து பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்" என்று குடும்ப ராவ் நினைவு கூர்ந்தார், முன்பு மாடியில் இருந்த அவர்களது ஹோம் தியேட்டர் இப்போது மெழுகு சிலை வைக்கப்படும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.
தந்தை மன உளைச்சலில் மூழ்குவதைப் பார்க்க முடியாத சஸ்யா, அவருக்குக் கொஞ்சம் நன்றாகத் தெரியும் என்று நினைத்த அந்த மெழுகுச் சிலையை அவருக்குப் பரிசளிக்கலாம் என்ற எண்ணத்தில் அனுபியுள்ளார். பச்சை நிறப் பட்டுப் புடவை உடுத்தி, பளபளக்கும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சிலை உய்ரோட்டமாக உள்ளது. "சாதாரண சிலைகளைப் போலல்லாமல், இவை நெகிழ்வானவை," என்று அவர் கூறுகிறார்.
அந்த சிலை மீது எலக்ட்ரிக்கல் வேலைகள் மற்றும் மலர் அலங்காரங்களை செய்து வருகிறார். ஆனால் அவரது ஆர்வம் தாவரங்களுடன் வாழ்வதிலும் பராமரிப்பதிலும் உள்ளது. அவரது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பெரிய அளவிலான மீன் தொட்டிகள் உள்ளன.
சஸ்யா உள்ளூர் சிற்பியான பி.வி.எஸ். பிரசாத், தன் தாயாரின் சிலையை செதுக்க கொடுத்துள்ளார். “சிலிகான் மெழுகு சிலையை செதுக்க முடியுமா என்று அமெரிக்காவிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டேன், ஆனால் நவம்பர் 14 அன்று தனது தாயின் பிறந்தநாளில் அதை தனது தந்தைக்கு பரிசளிக்க விரும்புவதால் 40 நாட்களுக்குள் அது இருக்க வேண்டும் என்று சாய்ஸா கேட்டதாக பிரசாத் கூறுகிறார்.
சவாலை ஏற்று, அவரும் அவரது குழுவினரும் இடைவிடாமல் அந்த உருவத்தை செதுக்கி சரியான நேரத்தில் வழங்கியுள்ளனர். "நாங்கள் முதலில் ஒரு களிமண் அச்சு தயாரித்தோம். அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ஃபைபர் மெழுகு சிலிகான் சிலையை செதுக்கினோம்," என்று அவர் கூறுகிறார். சிலை வைக்கப்பட்டுள்ள அறை ஒரு கோவில் போல் கருதப்படுகிறது. தரைத்தளத்தில், மாலையிடப்பட்ட உருவப்படம் அதன் முன் வைக்கப்பட்டுள்ள புதிய பழங்களுடன் முக்கியமாக வைக்கப்பட்டுள்ளது.
“மாம்பழங்கள் மற்றும் சீதாப்பழங்கள் அன்னபூரணிக்கு மிகவும் பிடித்த பழங்கள், அதனால் நான் அவற்றை தினமும் பெறுவேன். உள்ளூரில் கிடைக்காவிட்டால், பக்கத்து ஊர்களில் இருந்து பழங்களை இறக்குமதி செய்கிறேன்,'' என்கிறார் குடும்ப ராவ். பிப்ரவரி 6-ம் தேதி சிலையின் புடவை மாற்றப்பட்டு, நகைகளும் மாற்றப்படும். "இது எங்கள் திருமண நாள். வீட்டில் அன்னபூர்ணா நித்தியமாக்கிவிட்டார். என் மகளுக்கு என்னால் போதுமான நன்றி சொல்ல முடியாது, ”என்கிறார் குடும்ப ராவ்.
