Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் கண்ணாமூச்சியாடும் கொரோனா..!! முடிவுகட்ட சொல்லி, ஒரு கோடியுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்த எம்.பி..!!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மிக விலையுயர்ந்த மாத்திரைகளான 1.TACROLIMUS, 2.MYCOPHENOLATE, 3.CYCLOSPRIN ஆகியவை தினமும் சாப்பிடவேண்டும். இந்த மாத்திரைகளை நமது ராஜாஜி மருத்துவமனையில் அவர்களுக்கு விலையில்லாமல் தரப்படுகிறது.

Madurai mp venkadesan meet Madurai covid special administrator to control corona
Author
Chennai, First Published Jun 24, 2020, 5:50 PM IST

மதுரை மாவட்டத்துக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கொரோனா பரவலை தடுக்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக ரூபாய் ஒரு கோடி வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், மதுரையில் உடனே செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளார் அதன் முழுவிவரம்:-மதுரை மாவட்டத்தில் பெருகிவரும் கொரோனாதொற்றினைத் தடுத்திடவும்  தொற்றுக்குள்ளான மக்களுக்குச் சிறந்த, உரிய சிக்கிச்சையை உத்தரவாதப்படுத்தவும் கீழ்கண்ட நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்: முதலாவதாக , ஒரு வட்டாரத்துக்கு (BLOCK) 2 RBSK வண்டிகளும் ஒரு MMUவும் தற்பொழுது உள்ளன. ஒவ்வொருவண்டியிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒருமருந்தாளுனர் உள்ளனர். இவர்களைக் கொண்டு ஒருநாளைக்கு ஒரு முகாம் வீதம் 39(13 X 3முகாம்) காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்த வேண்டும். இந்தக் குழுக்களை எக்காரணங்கொண்டும் வேறுபணிகளுக்கு அனுப்பக்கூடாது. 

Madurai mp venkadesan meet Madurai covid special administrator to control corona

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும்மருத்துவர்களை, காலை 11 மணிக்குப் பிறகு அவர்களின் PHCக்கு அருகில் உள்ள கிராமங்களுக்குச்சென்று மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களுக்கான வாகனம் உள்ளிட்ட இதரஏற்பாடுகளை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் 100 முகாம்கள் நடந்தால், சுமார் 7500 நபர்களை அவர்கள் இடத்திற்கே சென்று முகாம்களில் சந்திப்பதன் மூலம் காய்ச்சலும் கொரோனா அறிகுறிகளும் இருப்பவர்களை நிறையக்கண்டறியலாம். அவ்வாறு கண்டறியப்படுபவர்களுக்கு முகாம்களிலேயே கொரோனா சளி மாதிரி (swab) எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும். இம்முகாம்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச்(சாமியானா, இருக்கைகள் உள்ளிட்டவை)  செய்வதற்கு ஆகும் தொகையை - மதுரைநாடாளுமன்ற தொகுதிகளுக்குள் நடக்கும் அத்தனை முகாம்களுக்கும் ஆகும் தொகையை - எனதுநாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துதருவதற்கு நான் தயாராக உள்ளேன். இம்முகாம்களில் மருத்துவர்கள் கண்டறிந்து கொரோனா சளி மாதிரிகள் எடுக்கப்பட்டவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எக்காரணங்கொண்டும் சீலிடக்கூடாது. அந்த நபரின்பரிசோதனைமுடிவுகள் வரும் வரை வீட்டிலிருந்து அவர்வெளியே வராதவாறு உறுதிசெய்ய வேண்டும். Madurai mp venkadesan meet Madurai covid special administrator to control corona
 முகாம்களைத் தவிர மக்கள்தொகை அடர்த்தி அதிகம் இருக்கும் பகுதியில் COVID RISK ASSESSMENTகணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில்கண்டறியப்படும் நபர்கள் கோவிட் சுகாதாரமையத்துக்கோ, கோவிட் மருத்துவமனைக்கோகொண்டுசெல்லப்பட வேண்டும்.
 வெளிமாவட்டத்திலிருந்தோ வெளிமாநிலத்திலிருந்தோ வருகிறவர்களுக்கு மாவட்டஎல்லையிலே கொரோனா சளி சோதனை செய்யப்படவேண்டும். சோதனைமுடிவுகள் வரும்வரை, (ஒருநாளுக்குள் முடிவுகள் வருவதை உறுதிப்படுத்தவேண்டும்) நிர்வாகம் ஏற்பாடு செய்யும் இடத்திலோ அவரது செலவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் இடத்திலோ அவர்களைத் தங்கவைக்க வேண்டும்.
 அறிகுறிகளற்ற கோவிட் நோயினரை (asymptomatic positive) பாதுகாப்பாய் பராமரிக்க 1000படுக்கை வசதிகள் கொண்ட Facility Quarantine அமைக்க வேண்டும்.அறிகுறிகளற்ற துணைநோய் உடைய கோவிட் நோயருக்கு (asymptomatic posited with comorbidities) முழு மருத்துவ அவசர மேல்சிகிச்சைக்கு தயார்நிலையில் தனி தடுப்பு ஒதுக்க வசதி கொண்ட படுக்கைகளை குறைந்தபட்சம் 500யையேனும்ஏற்படுத்த வேண்டும். 

Madurai mp venkadesan meet Madurai covid special administrator to control corona
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மிக விலையுயர்ந்த மாத்திரைகளான 1.TACROLIMUS, 2.MYCOPHENOLATE, 3.CYCLOSPRIN ஆகியவை தினமும் சாப்பிடவேண்டும். இந்த மாத்திரைகளை நமது ராஜாஜி மருத்துவமனையில் அவர்களுக்கு விலையில்லாமல் தரப்படுகிறது.  மதுரையில்  சுமார் 80 முதல் 100 நோயாளிகள் இப்படி பயன்பெறுகிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிகமிகக் குறைவு. அவர்கள் ஒரு இறுதிச்சடங்கில்கூட கலந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுபவர்கள். கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்தக்காலத்தில் அரசுமருத்துவமனையின் பெருங்கூட்டத்துக்குள் வந்து அவர்களை வாங்கிச்செல்லச் சொல்வது பாதுகாப்பானது அல்ல. எனவே அவர்களுக்கு வேறு ஒரு இடத்தை அறிவித்து, மாதமாதம் அங்கு வந்து வாங்கிச்செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். நாள்தோறும் 3000 எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுவதைஉறுதிப்படுத்தவேண்டும். 

Madurai mp venkadesan meet Madurai covid special administrator to control corona

மதுரை, கொரோனா வார்டில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்கு அதிகரிக்க வேண்டும்.மதுரைமாவட்டத்தில் கொரோனாவுக்கு எதிரானபோராட்டத்தில் முழுவெற்றியடைய மாவட்ட நிர்வாகம்எடுக்கும் அனைத்து நல்ல முயற்சிக்கும் உடன்நிற்போம். அதேநேரத்தில், ஏற்கனவே எனது நாடாளுமன்ற தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து அரசு இராஜாஜி மருத்துவமனைகோவிட் வார்டுக்கு தேவையான உபகரணங்களையும் அரசுஅலுவர்களுக்கு ஒரு லட்சம் முகக்கவசங்களையும் வாங்கித்தந்துள்ளேன். கோவிட் போராட்டத்தின் அடுத்த கட்டமான இப்பொழுதுமேற்கண்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளைச் செய்ய எனது நாடாளுமன்ற தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் ஒரு கோடி ரூபாய்தருவதற்கு தயாராக உள்ளேன் என்பதையும்தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios