இனி காவல்துறையினர் குடும்பத்தினருடன் முக்கிய விழாக்களுக்கு செல்ல விடுமுறை வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லி: இனி காவல்துறையினர் குடும்பத்தினருடன் முக்கிய விழாக்களுக்கு செல்ல விடுமுறை வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெல்லி காவல்துறையினரை மகிழ்விக்கும் இந்த உத்தரவை காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் உள்ள காவல்துறை பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பிறந்த நாள், திருமண விழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு செல்ல விடுமுறை அளிக்கப்படும்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 80 ஆயிரம் போலீசார் முக்கிய நிகழ்வுகளை குடும்பத்துடன் கொண்டாடலாம்.

இனி பிறந்த நாள்,திருமண நாள், வாழ்க்கை துணைவரின் பிறந்த நாள், குழந்தைகளின் பிறந்த நாள் ஆகியவற்றுக்கு ஒருநாள் விடுமுறை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.