Asianet News TamilAsianet News Tamil

நகை அடகு கடை அதிபர் கடத்தி கொலை.. அழுகிய நிலையில் தோண்ட முடியாமல் திணறும் போலீசார்.!!

வந்தவாசியில் கடத்தப்பட்ட நகை அடகு கடை வியாபாரி  கடத்தி  கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

Kidnapping of jewelery pawn shop inspector ..
Author
Thiruvannamalai, First Published Jun 5, 2020, 8:56 PM IST

 வந்தவாசியில் கடத்தப்பட்ட நகை அடகு கடை வியாபாரி  கடத்தி  கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை அடுத்து வந்தவாசியை சேர்ந்த அசோக சக்கரவர்த்தி 25 கி.மீ தொலைவில் உள்ள பேசூர் என்ற இடத்தில் அடகு கடை ஒன்றை நடத்தி வந்தார். ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதை அடுத்து கடையை திறந்த அவர், கடந்த 25-ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். நீண்ட நேரமாகியும் தன் கணவர் வீடு திரும்பாததால் பேசூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Kidnapping of jewelery pawn shop inspector ..

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அசோக சக்கரவர்த்தி பயன்படுத்தி வந்த செல்போன் கால்களை விசாரித்த போலீசார் கடத்தல் தொடர்பாக  மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அசோக சக்கரவர்த்தி கொலை செய்யப்பட்டு தைலம் மரம் காட்டில் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரது கடையில் இருந்த தங்க, வெள்ளி நகைகள் கொள்ளை போனதும் தெரிய வந்துள்ளது.

Kidnapping of jewelery pawn shop inspector ..
 கடத்தப்பட்ட பிறகு அசோக சக்கரவர்த்தி அனுப்பிய நபர்களிடம் அவரது மனைவியும் நண்பரும் ரூ.3 லட்சம் பணம் அளித்ததும் தெரியவந்தது. இதனிடையே தைல மர காட்டில் புதைக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின்  சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.துறுநாற்றம் வீசியதால் அந்த பணி பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்த பணி முழுமையடையாமல் இருப்பதால் இன்னும் விசாரணை முடியவில்லை. எதற்காக கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்கிற முழுவிபரம் இன்னும் வெளியாகவில்லை. 
இந்த கொலை சம்பவம் வந்தவாசியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios