பாஜகவில் குஷ்பு இணைந்தது எங்கள் கூட்டணிக்கு பலம்... அமைச்சர் உதயக்குமார் பெருமிதம்..!
பாஜகவில் குஷ்பு இணைந்தது எங்கள் கூட்டணிக்கு பலமாக அமைந்துள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் குஷ்பு இணைந்தது எங்கள் கூட்டணிக்கு பலமாக அமைந்துள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார்.' நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோடியால் மட்டுமே நல்லது செய்ய முடியும் அதை உணர்ந்த பின்னர் தான் நான் பாஜகவில் இணைந்தேன்'. என்றார் குஷ்பு.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயக்குமார்.., "உரிமைகள் பாதிக்காத வகையில் வளர்ச்சியை பெற வேண்டும் என சூரப்பாவின் கடிதம் குறித்து பதிலளித்துள்ளார். தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும் என்றும் எங்களின் கூட்டணியில் உள்ள பாஜகவில் குஷ்பு இணைந்தது எங்களுக்கு பலம்.இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் தற்போது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டி. ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ,கனிமொழி ,டி.கே.எஸ் இளங்கோவன், பேராசிரியர் அ. ராமசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.