ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள நிலையில் தமிழரான சுப்ரமணியம்சுவாமியின் அழிசாட்டியம் மட்டும் குறைந்த பாடில்லை 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போராடும்தமிழர்களை பொறுக்கிகள் என்றும் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறார் 

சுவாமியின் இந்த லூசு தனமான பேச்சுக்கு நடிகர் கமல் கண்டனம் தெரிவித்திருந்தார் .அதற்கும் கமலை திட்டி தீர்த்தார் சுவாமி 

இந்தநிலையில் மத்திய தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனை கமல்ஹாசன் திடீரென நேரில் சந்தித்தார் 

அப்போது தமிழக போரட்டங்கள் குறித்து பேசிவிட்டு சு சுவாமியின் தேவையற்ற தமிழர் விரோத போக்கு குறித்து கமல் கூறியிருக்கிறார் மேலும் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டதாக கூறபடுகிறது 

சுப்ரமணியம்சுவாமி.. கமல்சர்சைகளுக்கு மத்தியில் கமல் பொன் ராதாவை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்திள்ளது