கஜா புயலால் பாதிக்கட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தேர்வுகள் ரத்தாக வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கொட்டையன் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்..

தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் இடையே கடந்த 16-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்த புயலால் டெல்டா மாவட்டங்கள் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 60 பேர்வரை உயிரிழந்துள்ளனர், மக்கள் வீடுகளையும், தோட்டங்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். ஏறக்குறைய 3.50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

நாகை மாவட்டத்தில் இன்னும் சில பகுதிகளில் பள்ளிக் கூடங்களில்தான் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தஞ்சைமாவட்டஆட்சியர் அலுவலகத்தில்கஜாபுயல்பாதிப்புநிவாரணபணிகள்தொடர்பானஆலோசனைகூட்டம்நடைபெற்றது. கூட்டத்தில்அமைச்சர்கள்செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலைராதாகிருஷ்ணன், கடம்பூர்ராஜூ, வைத்திலிங்கம்எம்.பி, ஆகியோர்கலந்துகொண்டனர்.

இதையடுத்துசெய்தியாளர்களிம் பேசியஅமைச்சர்செங்கோட்டையன், கஜாபுயலால்பாதிக்கப்பட்டமாவட்டங்களில்அரையாண்டுதேர்வுவழக்கம்போல்நடைபெறும். ரத்தாகவாய்ப்புஇல்லைஎன தெரிவித்தார்.

மாணவர்களின்எதிர்காலத்தைகருத்தில்கொண்டுசிறப்பானபயிற்சிஅளிக்கப்படும். டெல்டாமாவட்டங்களில் 84 ஆயிரம்மாணவர்களுக்குபுதியபாடப்புத்தகங்கள்வழங்கப்பட்டுவருகிறது. நீட்தேர்வைபொறுத்தவரைமத்தியஅரசுபரிசீலனைசெய்தால்அதற்கானநடவடிக்கைதமிழகஅரசுமேற்கொள்ளும் என்றும் செங்கோட்யைன் தெரிவித்தார்..

டெல்டாமாவட்டங்களில்முழுமையானபாதிப்புள்ளாகியமாணவர்களுக்குஎன்னநிவாரணம்வழங்கலாம்எனமுதலமைச்சரிடம் ஆலோசித்துபின்னர்நிவாரணம்வழங்கப்படும்எனவும் செங்கோட்யைன் தெரிவித்தார்.