அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கடந்த ஜனவரி 25 அன்று கே.சி.பழனிசாமியை காவல் துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மத்திய சிறையில் கே.சி. பழனிச்சாமி அடைக்கப்பட்டார்.
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சூலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
Add Asianetnews Tamil as a Preferred Source


அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று அதிமுகவுக்கு எதிராக கருத்து கூறிவந்தார். இந்நிலையில் அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கடந்த ஜனவரி 25 அன்று கே.சி.பழனிசாமியை காவல் துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மத்திய சிறையில் கே.சி. பழனிச்சாமி அடைக்கப்பட்டார்.

