Jayalalitha memmoriel building ops eps partcipated

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பு யாகங்களுடம் தொடங்கியுள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த விழாவுக்கு முன்னதாக நடைபெற்ற சிறப்பு யாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ம் பங்கேற்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஏற்கனவே அறிவித்தது. 



இந்த மண்டபம் கட்டுவதற்காக 50 கோடியே 80 லட்சம் ரூபாய் அளவில் டெண்டா் விடப்பட்டன. இதைத்தொடா்ந்து இன்று காலையில் மொினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. 

நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 

ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை தாங்கி அடிக்கல் நாட்டுகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்