Jay death in appolo hospital. Divakaran press meet

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தாம் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் திடீர் பல்டி அடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர் சிகிக்சைக்குப் பிறகு டிசம்பர் மாதம் 5 தேதி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக திடீர் என மரணமடைந்ததார். மருத்துவமனை நிர்வாகத்தின்படி 5 ஆம் தேதி இரவு ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.



அதில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாகவும், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை குழுமத்துக்கு சொந்தமான மருத்துமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர், மறுநாள் 5-ம் தேதி தாமதமாக அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் அவர் பேசினார். திவாகரனின் இந்த பேச்சு தமிழகம் முழவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது



இந்நிலையில், தனது மன்னார்குடி பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தற்போது திவாகரன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா கிளினிக்கல் ரீதியில் மரணமடைந்தார் என்றும், பயாலஜிக்கல் மரணம் ஏற்படாமல் தடுக்க உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

திவாகரனின் இந்த பேச்சு அதிமுக கட்சினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது