Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு 10 கோடி தமிழர்க்கு ஓபிஎஸ் என்கிற உத்தம தமிழன் தந்த ஒப்பில்லா பரிசு அல்லவா?மருது அழகுராஜ் புகழாரம்

பச்சைத் தமிழன் பன்னீர்செல்வம் என்கிற ஒற்றை மனிதரின் அயராத உழைப்பும் வங்கத்து கடற்கரையில் வெடித்த மெரீனா தன்னெழுச்சி புரட்சியும் ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிய புதுப்பாதை வகுத்தது.

Jallikattu is a unique gift given by OPS to 10 crore Tamils.. Marudhu Alaguraj
Author
First Published May 19, 2023, 8:23 AM IST

ஒற்றை மனிதரின் அயராத உழைப்பும் வங்கத்து கடற்கரையில் வெடித்த மெரீனா தன்னெழுச்சி புரட்சியும் ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிய புதுப்பாதை வகுத்தது என மருது அழகுராஜ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- உச்சநீதிமன்றம் ஓங்கி ஒலித்த உயரிய முரசு குடும்ப  அட்டைகளில் பெயர் குறிப்பிடப்படாத வீட்டு குழந்தைகளாக வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது அன்றைய காங்கிரஸ் தி.மு.க. ஆட்சி கொல்லேற்று கோடஞ்சுவானை மறுமையிலும் புல்லாளே ஆயமகள் என்றே சிலம்பு காவியமும் கலித் தொகையும் பெரும்பானாற்றுப் படையும் சீர்தூக்கிப் பாடிய ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு எருதுகட்டு என்பதெல்லாம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியின் வீரவிளையாட்டு என்பதை விளங்காத கூட்டம் காளைகளை துன்புறுத்துவதாய் சொல்லி தமிழர்தம் பண்பாட்டுப் பெருமையான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

இதையும் படிங்க;- கோமாளி ஜெயக்குமாருக்கு ஊழலை பற்றி பேச தகுதியே இல்லை! அவருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை! வைத்திலிங்கம் விளாசல்

Jallikattu is a unique gift given by OPS to 10 crore Tamils.. Marudhu Alaguraj

இதனால் ஒன்பது வருடங்கள் களையிழந்து போனது தமிழகம் காளை மாடுகள் எல்லாம் இறைச்சிக்கு மட்டுமே இரையானது நாட்டு மாட்டினமே அழிந்து சீமை மாடுகள் இறக்குமதியாக பூர்வீக தமிழகத்தில் புதுப்புது வியாதிகள் புற்றீசல் போல் பிறந்தன ஆனாலும்… பச்சைத் தமிழன் பன்னீர்செல்வம் என்கிற ஒற்றை மனிதரின் அயராத உழைப்பும் வங்கத்து கடற்கரையில் வெடித்த மெரீனா தன்னெழுச்சி புரட்சியும் ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிய புதுப்பாதை வகுத்தது.

Jallikattu is a unique gift given by OPS to 10 crore Tamils.. Marudhu Alaguraj

அந்த  புரட்சியும் வென்றது ஆம்… புதுடெல்லி சென்ற அன்றைய முதலமைச்சர் அம்மாவின் விசுவாசப் பிள்ளை ஓ.பி.எஸ். என்கிற அந்த மூன்றெழுத்து மந்திரம் தலைநகரில் முகாமிட்ட எழுபத்தி இரண்டு மணி நேரத்தில் தடை உடைந்தது விடை பிறந்தது காளைகளை பிடித்துக் கொண்டு சாலைகளில் நடந்தாலே கைது என்னும் கருப்புக் காலங்கள் கிளர்த்தெழுந்த எதிர்ப்பு என்னும் நெருப்பு கோலங்களால் புறநானூற்று மண்ணில் இருந்து புறமுதுகிட்டு ஓடியது மீண்டும் ஜல்லிக்கட்டு என்கிற பொற்கால பூபாளம் புதுக்கோலம் பூண்டது.

இதையும் படிங்க;-  நாங்கள் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி.. காலரை தூக்கிவிடும் முதல்வர் ஸ்டாலின்..!

Jallikattu is a unique gift given by OPS to 10 crore Tamils.. Marudhu Alaguraj

பூட்டிக் கிடந்த வாடி வாசல்களின் பூட்டுக்கள் உடைந்தன கன்னியை அணைவதற்கு முன் காளைகளோடு வெள்ளோட்டம் பார்க்கிற எம்இனத்து வீரத்தமிழ் இளைஞர்களுக்கு ஒப்பில்லா பரிசாக மீண்டும் ஜல்லிக்கட்டு வீரத் தமிழ் மண்ணில் விழாக் கோலம் பூண்டது என்றால்… இது… பத்துகோடி தமிழர்க்கு பன்னீர்செல்வம் என்கிற உத்தம தமிழன் தந்த ஒப்பில்லா பரிசு அல்லவா? இன்று இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது என்றால் இது தீந்தமிழர் வாழ்வில் திருவிழா கோலம் அல்லவா ! என்ன நாஞ் சொல்றது என மருது அழகுராஜ் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios