jacto jeo protest in chennai police arrest teachers

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் தலைமைச் செயலகம் பகுதியில் 6000 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியூர்களில்இருந்து வரும் ஆசிரியர்களை போலீசார் வளைத்து, வளைத்து கைது செய்து வருகின்றனர்..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அவர்களை அழைத்து பேசி தீர்வு காண முடியாத தமிழக அரசு, போராட்டத்தை ஒடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து வருகிறது. 

இதனிடையே , தலைமை செயலகம் செல்லும் சாலையில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடற்கரை சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளிலும் வாகன சோதனை நடக்கிறது. முன்னதாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து பேரணியாக தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த மேலும் சிலரை போலீசார் தடுத்து கைது செய்தனர். இதனால் தலைமை செயலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது.