Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து ஊத்தப்போகிறது..!! 10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..!!

அடுத்த 48 (12.09.2020) மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

It is going to blow in Tamil Nadu in the next 24 hours .. !! Heavy rain warning for 10 districts .. !!
Author
Chennai, First Published Sep 11, 2020, 3:14 PM IST

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்,கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 48 (12.09.2020) மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

It is going to blow in Tamil Nadu in the next 24 hours .. !! Heavy rain warning for 10 districts .. !!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன்  காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் தேவலா (நீலகிரி ) 10,  சென்டிமீட்டர் மழையும், சேலம் (சேலம்), பந்தலூர் (நீலகிரி) தலா 5 சென்டிமீட்டர் மழையும், சோலையார்(கோவை), தஞ்சாவூர்(தஞ்சாவூர்),சின்னக்கல்லார் (கோவை), சின்கோனா (கோவை), மேல் பவானி (நீலகிரி), வால்பாறை  PTO (கோவை), கோத்தகிரி (நீலகிரி), வெண்ட் ஒர்த்  எஸ்டேட் (நீலகிரி) தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

It is going to blow in Tamil Nadu in the next 24 hours .. !! Heavy rain warning for 10 districts .. !!

செப்டம்பர் 11 முதல்  செப்டம்பர் 15 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில்     பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 11,12 கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில்    சூறாவளி காற்று 45-55  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 11 ஆம் தேதி மன்னார் வளைகுடா  பகுதிகளில் பலத்த காற்று 45-55  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 12.09.2020  இரவு 11.30  மணி வரை  கடல் உயர் 3.5 முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios