டி.கே சிவகுமாரின் முதலமைச்சரின் கனவு சிதைந்ததற்கு ராஜ யோகம் இல்லாதது தான் காரணமா?

சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையே இருந்த அதிகார மோதலை, காங்கிரஸ் ஒருவழியாக தீர்த்து வைத்திருக்கலாம். சிவகுமாரை சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தனது அரசியல் ஜோதிடர் வேலூர் சங்கரநாராயணன் துவாரகநாத் குருஜியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தததாக கூறப்படுகிறது. அவர் துவாரகநாத் குருஜி என்று பிரபலமாக அறியப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சிவகுமாரின் ஜாதகத்தின் படி, இன்னும் 'ராஜ யோகம்' அமையாததால், காங்கிரஸ் மேலிடம் வழங்கிய ஃபார்முலாவை ஏற்குமாறு துவாரகாநாத் அறிவுறுத்தியதாக சிவகுமாரின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ராஜாவைப் போலவே, புகழ், செழிப்பு, செல்வம், நற்பெயர் மற்றும் வாழ்க்கையில் ஆசைகளை நிறைவேற்றும் காலமே ராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது.

கர்நாடக அரசியல் வரலாற்றில் கட்சிக்கு அதிக இடங்களைப் பெற உதவிய காங்கிரஸின் நம்பகமான தலைவர் என பிரபலமாக அறியப்பட்ட சிவக்குமார், தனக்கு விரைவில் முதல்வர் நாற்காலி தருவார்கள் என்று நம்புவதாக கூறப்படுகிறது.

நவம்பர் 2025 க்குள் சிவகுமாரின் கிரக நிலைகள் மாறும் என்றும் துவாரகநாத் கணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காலக்கெடுவும் காங்கிரஸ் தலைமை வழங்கிய 2.5 ஆண்டுகள் சுழற்சி முதல்வர் விருப்பத்துடன் ஒத்துப்போகிறது என்றும் கூறப்படுகிறது.

டிகே. சிவகுமார் முதலமைச்சர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்பதால், சீட் தானாகவே வந்துவிடும் என்றும், அவர் சண்டையிட வேண்டியதில்லை" என்று துவாரகநாத் டி.கே.எஸ்-க்கு அறிவுறுத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துணை முதல்வர் பதவியை ஏற்கவும், கர்நாடகாவில் வெற்றிகரமான காங்கிரஸ் ஆட்சியை உருவாக்கவும் சிவகுமாரை சமாதானப்படுத்தியதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கார்கே ஆகியோர் முக்கியப் பங்காற்றிய அதே வேளையில், டி.கே.சிவகுமார் துவாரகாநாத்தின் ஆலோசனையைப் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்ட பிறகு, தனது ட்விட்டரில் பதிவிட்ட சிவகுமார் மாநிலத்தின் பாதுகாப்பான எதிர்காலமே காங்கிரஸின் முன்னுரிமை என்று ட்வீட் செய்தார், மேலும் பெரும்பான்மையுடன் வாக்களித்த மக்களுக்கு கட்சி தனது வாக்குறுதிகளை வழங்குவதற்கு உதவ உறுதிபூண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியுடன் சேர்த்து 6 அமைச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவகுமார் ஜோதிடம், எண் கணிதம் ஆகியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்டவர், மேலும் கர்நாடகா மற்றும் நாடு முழுவதும் உள்ள ஏராளமான அரசியல் தலைவர்களுக்கு மிகவும் பிரபலமான ஜோதிட வழிகாட்டி மற்றும் ஆன்மீக தத்துவஞானி துவாரகாநாத்தின் ஆலோசனையை அடிக்கடி பெற்று வருகிறார்.

முன்னாள் முதல்வர்களான தேவராஜ் அர்ஸ், எஸ்.எம்.கிருஷ்ணா, தரம் சிங் மற்றும் எச்.டி.குமாரசாமி ஆகியோர் தங்களது தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் அவரது ஆலோசனையைப் பெற்றுள்ளனர். 1978-ல் சிக்கமகளூர் தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெறுவார் என்று கணித்த ஜோதிடர், பின்னர் 2014 தேர்தலில் மோடி வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், இரண்டு முறை இந்தியாவின் பிரதமராகவும் பதவியேற்பார் என்று கூறியதையடுத்து அரசியல் வட்டாரங்களில் புகழ் பெற்றார்.

சுஷில் குமார் ஷிண்டே, அகமது படேல், அமரீந்தர் சிங், விலாஸ்ராவ் தேஷ்முக் போன்ற மூத்த அரசியல்வாதிகள், பல அதிகாரிகள், திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் துவாரகாநாத்திடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது..