அப்பொருட்களை கள்ளச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பவர்களை  கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார் .  தற்போது வரை மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு  திருப்தி அளிப்பதாக உள்ளது.  

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தேவையான அளவுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வரும் இல்லை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது . கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது , இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக மார்ச் 25 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது ஆனாலும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமெடுத்து வருகிறது, 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

 இதனால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது, அதன் பிறகு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும், அத்துடன் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ,

அப்பொருட்களை கள்ளச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார் . தற்போது வரை மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக உள்ளது. எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார் . அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றியும் நியாயமான விலையிலும் கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .