நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு, கொடுக்க கூடாத மருந்துகளை கொடுத்து, ஸ்லோ பாய்சன்' மூலம் கொலை செய்தது டி.டி.வி.தினகரன் கும்பல் தான் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடியாக குற்றச்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக செல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.அப்போது பேசிய அவர்தினகரனும், ஸ்டாலினும்சேர்ந்துஆட்சியைகவிழ்க்கமுயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் இந்த ஆட்சியைக் கலைக்கவோ, கவிழ்க்கவோ முடியவில்லை என்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


ஒரு வழக்கில், தன்னைவிடுவித்துக்கொண்டு, ஜெயலலிதாவைசிக்கவைத்தவர்தான்டி.டி.வி. தினகரன். இதுதெரிந்ததும், அவரை வீட்டைவிட்டுதுரத்தினார்.

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருக்கும் போது அவருக்குசர்க்கரைவியாதியைஅதிகரித்து, அதற்குஎந்தமருந்தையெல்லாம்கொடுக்கக்கூடாதோ, அவற்றைகொடுத்து, 'ஸ்லோபாய்சன்' என்றுசொல்வார்களே, அப்படிமெதுவாகவிஷம்ஏற்றிகொலைசெய்ததுதினகரன்கும்பல் என ஓபனாக குற்றம்சாட்டினார்.

அந்தகும்பலுடன், நிலக்கோட்டைதொகுதி, எம்.எல்..,வாகஇருந்ததங்கதுரையும்சென்றுள்ளார். இந்தஆட்சிக்குதுரோகம்செய்தஅவருக்கு, தக்கபாடம்புகட்டவேண்டும். இவ்வாறுஅவர்பேசினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.