நினைவிருக்கிறதா 14 ஆம் தேதி..! வரங்கொடுத்தவர் தலையிலேயே கை வச்சாச்சு..! ஸ்வாஹா....
மறைந்த முதலவர் ஜெயலலிதா மரணத்தில் மரமும் உள்ளது என பல்வேறு சந்தேக கேள்விகளை எழுப்பி, இது குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தபட வேண்டும் எனவும், குறிப்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப பட வேண்டும் எனவும் சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் ஆவேசமாக இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மறைந்த முதலவர் ஜெயலலிதா மரணத்தில் மரமும் உள்ளது என பல்வேறு சந்தேக கேள்விகளை எழுப்பி, இது குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தபட வேண்டும் எனவும், குறிப்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப பட வேண்டும் எனவும் சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் ஆவேசமாக இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி ளித்து இருந்தார்.
என்னடா இது! நல்லாதானே போய்கிட்டு இருந்தது என சிந்திக்கும் போது தான் இன்னொரு மேட்டர் நினைவு வருது. அதாவது, கடந்த14 ஆம் தேதி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார்.
அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளும் அப்போதய முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தான் தெரியும், அவர் எதுவும் சொல்லவில்லை என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் சட்டத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளரை கேமுக்கு உள்ளே இழுத்துள்ளார்.
சரி இவர் தான் இப்படி சொல்லி இருக்காரே என்னவா இருக்கும் என யோசனை செய்வதற்குள், சி.வி. சண்முகத்தின் கருத்திற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.
ஆக வருடத்தின் இறுதி நாளான இன்று தமிழக அரசியலில் தடால்புடால் இல்லைனா எப்படி என்பதற்கு ஏற்ப, ஜெயலலிதா மரணம் பற்றி புதுசு புதுசா கொளுத்தி போடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அந்த 14 ஆம் தேதி பேட்டி தானோ என விமர்சனம் செய்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.