Asianet News TamilAsianet News Tamil

எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்க... ஆயிரம் விளக்குவாசிகளுக்கு குஷ்புவின் வேண்டுகோள்..!

தமிழக மக்கள் எனக்குக் கொடுத்த அன்பு, மரியாதை, ஆகியவற்றை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் இந்த வாய்ப்பை நான் தவறவிடவே மாட்டேன் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
 

Give me a chance ... Khushboo's request to a thousand lanterns ..!
Author
Chennai, First Published Mar 15, 2021, 10:07 PM IST

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தொகுதியின் பொறுப்பாளராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டார். அவரும் அந்தத் தொகுதியைச் சுற்றி ஆர்வமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால், அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் குஷ்பு ஏமாற்றமடைந்தார். அதேவேளையில் பாஜகவுக்கு ஆயிரம் விளக்கு, துறைமுகம் ஆகிய தொகுதிகள் சென்னையில் ஒதுக்கப்பட்டன.

Give me a chance ... Khushboo's request to a thousand lanterns ..!
இதில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த கு.க. செல்வத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகுதியின் வேட்பாளராக நடிகை குஷ்பு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஆயிரம் விளக்கு தொகுதியி தேர்தல் பணியை குஷ்பு தொடங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் தேர்தலில் வெற்றியைத் தரும் வாய்ப்பு கேட்டும்  நடிகை குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.Give me a chance ... Khushboo's request to a thousand lanterns ..!
அதில், “மக்களுக்குச் சேவை செய்வதே என் குறிக்கோள். முழுமையான அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுடன் அதை நான் செய்வேன் என உறுதி அளிக்கிறேன். தமிழக மக்கள் எனக்குக் கொடுத்த அன்பு, மரியாதை, ஆகியவற்றை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் இந்த வாய்ப்பை நான் தவறவிடவே மாட்டேன். சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுங்கள்” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios