காயத்ரி ரகுராம் சறுக்கி விழுந்தபோது விலகிய புடவை.. ஆபாசமாக பதிவிட்ட திமுக பிரமுகர்.. காவல் ஆணையரிடம் புகார்.
ஆனால் அந்தப் புகைப்படத்தை தற்போது திமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் ஆபாச கருத்துக்களுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது,
சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். எதற்கெடுத்தாலும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கும் திமுக எம்பி செந்தில் மற்றும் எம்.பி கனிமொழி ஆகியோர் எனது விவகாரத்தில் இதுவரை கருத்து பதிவு செய்யவில்லை, இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பாமக மாவட்ட செயலாளர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை.. திருநள்ளாறில் 144 நடை உத்தரவு.
நடிகையும் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்து வருகிறார் காயத்ரி ரகுராம், சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் திமுக பிரமுகர் மீது ஆபாச புகார் ஒன்று கொடுத்துள்ளார். நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த அவர், சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து திமுக பிரமுகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புகார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியின்போது பாஜக சார்பில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாகவும், அப்போது மாட்டு வண்டியில் சென்ற நேரத்தில் சறுக்கி கீழே விழுந்து போது, புடவை விலகிய நேரத்தில் ஆபாச நோக்கில் ஒருவர் தன்னை புகைப்படம் எடுத்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்: தமிழக ஆளுநரை தபால்காரரை போல செயல்பட வைத்து விடுவார் போல மோடி.. தமிழக எம்.பி பயங்கர நக்கல்.
ஆனால் அந்தப் புகைப்படத்தை தற்போது திமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் ஆபாச கருத்துக்களுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது, எந்த செயலுக்கும் திமுக எம்பி செந்தில் மற்றும் எம்.பி கனிமொழி ஆகியோர் கருத்துக்களை கூறுவர் ஆனால் எனது விவகாரத்தில் அவர்கள் இன்னும் கருத்து பதிவு செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாக உள்ளது. ஆபாச கருத்துக்களுடன் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக காயத்ரி ரகுராம் கூறினார்.