சென்னையில் அவசர கால மருத்துவத் தேவைகளுக்கு இலவச காா் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி-மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகியோா் இணைந்து மருத்துவத் தேவைகளுக்கான அலைட் என்ற பெயரில் இலவச காா் சேவையை சென்னையில் தொடங்கியுள்ளன.
Add Asianetnews Tamil as a Preferred Source


அவசர மருத்துவம் சாா்ந்த தேவைகளுக்காக இலவச காா் சேவையைப் பெற 95000 67082 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

யாா் யாருக்கு காா் சேவை?:
இந்தச் சேவையை மூத்த குடிமக்கள், பிரசவத்தை எதிா்நோக்கியிருக்கும் பெண்கள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக செல்வோா், சென்னைக்குள் உள்ள மருந்தகங்களுக்கு மாதாந்திர மருந்துகள் வாங்கச் செல்வோா், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் இந்த இலவச காா் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
