Asianet News TamilAsianet News Tamil

அபார்ஷன் செய்ய சொன்னதே அவர்தான்.. மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்.. வசமாக சிக்கிய மாஜி அமைச்சர் மணிகண்டன்.!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தாலேயே நடிகைக்கு கருகலைப்பு செய்ததாக கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகையின் முகத்தில் காயத்துடன் இருந்தபோது தான் சிகிச்சை அளித்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

former minister manikandan case... Doctor confession
Author
Tamil Nadu, First Published Jun 30, 2021, 1:07 PM IST

நடிகை பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

former minister manikandan case... Doctor confession

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தாலேயே நடிகைக்கு கருகலைப்பு செய்ததாக கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகையின் முகத்தில் காயத்துடன் இருந்தபோது தான் சிகிச்சை அளித்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

former minister manikandan case... Doctor confession

மேலும், நடிகையை தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அழைத்து சென்று தங்கியிருந்தது தொடர்பான ஆதாரங்கள் காவல்துறைக்கு சிக்கியுள்ளது. ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான மிக முக்கியமான ஆதாரமாக இந்த வாக்குமூலம் திரும்பியுள்ளதால் அவர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios