Asianet News TamilAsianet News Tamil

ஓட்டு போட்டவர்களே திட்டுறாங்க, திமுக ஆட்சி இப்படித்தான் இருக்கு.. முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிரடி !

இன்று மின்வெட்டால் ஓட்டு போட்டவர்களே திட்டுகிற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 750 கொலைகள் நடந்து உள்ளது. இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதற்கு இதுவே சான்று. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து அதில் எதையும் நிறைவேற்றவில்லை. 

Former admk minister thangamani speech about dmk govt and powercut issue at tiruchengode
Author
Namakkal, First Published May 2, 2022, 4:51 PM IST

நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் திருச்செங்கோட்டில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க செயற்கை மின்வெட்டை உருவாக்கி உள்ளார் செந்தில் பாலாஜி. 

Former admk minister thangamani speech about dmk govt and powercut issue at tiruchengode

நீட் தேர்வை திமுகவால் எந்த காலத்திலும் ரத்து செய் முடியாது. நீட் தேர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு எதையும் செய்ய முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆளுமைத்திறன் எடப்பாடியாருக்கு இல்லை என்று சொன்னார்கள். கூட்டணிக்கு ஒதுக்கிய இடத்தில் வெற்றி பெற்ற திமுக நகர்மன்றத் தலைவர்களை திமுக தலைவர் சேர்மன் பதவியை ராஜினாமா செய்ய வைக்க முடிந்ததா ? வெறும் அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். 

Former admk minister thangamani speech about dmk govt and powercut issue at tiruchengode

ஓபிஎஸ் தம்பி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றபோது கட்சியை விட்டு நீக்கியவர் எடப்பாடியார்.  இன்று மின்வெட்டால் ஓட்டு போட்டவர்களே திட்டுகிற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 750 கொலைகள் நடந்து உள்ளது. இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதற்கு இதுவே சான்று. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து அதில் எதையும் நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்லி உள்ளாட்சித் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கினார்கள்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்குறது.. 1,500 கோடி கமிஷன் போகுது.! பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

Follow Us:
Download App:
  • android
  • ios