fake Voter id in bangalore

கர்நாடகவில் மே மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறப் போகும் சூழலில் பிரச்சாரங்கள் உச்சக்கட்டதை அடைந்துள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் உள்ள வீடு ஒன்றில் 15000 அடையாள அட்டைகள் கைபற்றப்பட்டன. வாக்காளர் அட்டை கைபற்றப்பட்ட ஜாலஹள்ளியில் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிந்துள்ளனர்.

வாக்காளர் அட்டைகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.ஏராளாமான மடிக்கணினிகள் அச்சடிக்கும் இயந்திரமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை தனிப்படை அமைத்து குற்றவாளிகள் யாரென விசாரணை நட்த்தி வருகின்றன. போலி அடையாள அட்டைகளை உருவாக்கியவர்களை விரைவில் கைது செய்ய வேண்டுமென அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.