முன்னாள் திமுக அமைச்சரும், தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமான பரிதி இளம்வழுதி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 58
பரிதி இளம்வழுதி சென்னை எழும்பூர் மற்றும் பெரம்பூர் தொகுதியில் இருந்துஆறுமுறைதேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் 11வதுசட்டமன்றத்தின் (1996-2001 ) காலகட்டத்தில்பேரவைத்துணைத்தலைவராகஇருந்தார்.

மேலும்செய்திமற்றும்விளம்பரத்துறைஅமைச்சராக 2006-2011 காலகட்டத்தில்இருந்தார். இவர்தமிழகசட்டமன்றஉறுப்பினராக 28 ஆண்டுகள் (1984-2011) திமுக சார்பில்இருந்தார். இவர்தனது 25வதுவயதில்முதன்முதலில்சட்டமன்றதேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியவாணிமுத்துவை எதிர்த்துப் போடியிட்டு பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
பின்னர் எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011வரைசட்டமன்றஉறுப்பினராகஇருந்தார். இவர்சட்டமன்றஉறுப்பினராகபணியாற்றிய 1991-1996 காலகட்டத்தில்சட்டமன்றத்தில்ஒரேஒருதிமுகஉறுப்பினராகஇவர்செயல்பட்டவிதத்தைக்கண்டுதி.மு.கதலைவர்மு.கருணாநிதியால் இந்திரஜித், வீரஅபிமன்யுஆகியோருடன்ஒப்பிடப்பட்டுபுகழப்பட்டார்.

இவர்தி.மு.கவில்துணைப்பொதுச்செயலாளராகவும்பதவியில்இருந்தார். இந்நிலையில்தி.மு.கவில்ஏற்பட்டகசப்பின்காரணமாககட்சியில்இருந்துவிலகிகடந்த 2013 ஆம் ஆண்டு அ.தி.மு.கவில்இணைந்தார். உடனடியாக அவருக்கு அ.தி.மு.கவின்தலைமைச்செயற்குழுஉறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா மறைந்த பிறகு பரிதி இளம் வழுதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது வரை டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதி இளம் வழுதி உயிரிழந்தார்
