கொரோனா காலத்தில் தேர்தல் தேர்தல் நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வழங்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல பீகாரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதனையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைத்தேர்தல்கள் செப்டம்பர் 7 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் கொரோனா காலத்தில் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது, எப்படி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது போன்ற விவரங்களை ஆலோசனைகளாக வழங்கும்படி அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இதேபோல மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்கப்பட்டது. இதுதொடர்பாக பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான 10 வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் வாக்களிக்க அனுமதி, வாக்கு இயந்திரத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகே வாக்களிக்க அனுமதி, வாக்குச்சாவடிகளில் கிருமி நாசினி, சானிடைசர், சோப்பு வைக்க வேண்டும், தேர்தல் பிரசாரத்தில் அதிகபட்சமாக ஐந்து வாகனங்கள் மட்டுமே அனுமதி, வாக்கு எண்ணிக்கையின் போது ஏழு மேஜைகள் மட்டுமே அமைக்க வேண்டும்.