edappadi palanisamy photos in ministers room
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள் அறையிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதல் நிலை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்தது அமைச்ச்சர்களே.
எம்.எல்.ஏக்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்ட போது அமைச்சர்கள் தான் அவர்களிடம் பேசி நிலையை சரிகட்டியுள்ளனர். மேலும் எடப்பாடி ஆட்சி அமைந்தால் செய்ய வேண்டியதை செய்வோம் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதனால் எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு வாக்கு அளித்தனர். இதைதொடர்ந்து எடப்பாடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் காலூன்றியது.
பின்னர், அமைச்சர்கள் எடுக்கும் முடிவுக்கு எடப்பாடியும் ஒத்து ஊத ஆரம்பித்தார்.
வருமான வரி சோதனையில் சிக்கியும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நழுவி கொண்டார் எடப்பாடி.
இதைதொடர்ந்து கட்சியில் இருந்து தினகரனை ஒதுக்கி வைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் தரப்பினர் கோரிக்கை விட்ட போது அமைச்சர்கள் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.

இதற்கும் எடப்பாடி ஒப்புதல் தர தைரியமாக வெளியே வந்து அமைச்சர்கள் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.
இதையடுத்து இரட்டை இலை விவகாரத்தில் சிறைக்கு சென்று திரும்பிய தினகரனை கட்சியில் சேர்க்ககூடாது என அமைச்சர்கள் முடிவெடுத்தனர். அமைச்சர்களின் இந்த முடிவுக்கு முதலமைச்சர் தர்பப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கள் நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் தினகரன் அறிவித்தபடி அவர் கட்சியை விட்டு விலகியிருப்பதே அவருக்கு நல்லது எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், அமைச்சரும் முதலமைச்சரும் இணக்கமாக செயல்பட்டு வருவதால் அனைத்து அமைச்சர்களும் தனது அறையில் எடப்பாடி படத்தை நேற்று முதல் மாட்டி வைத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி படமும் வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராகி 100 நாட்கள் ஆன நிலையில் தற்போது தான் எடப்பாடி படம் மாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
