Asianet News TamilAsianet News Tamil

திமுக அமைச்சர்களுக்கு நடுவில் தனியாளாய் எடப்பாடி பழனிச்சாமி.. ரத்தத்தின் ரத்தங்களை சோகத்தில் ஆழ்த்தும் போட்டோ.

அந்த பகைப்படத்தில், அவருக்கு முன்னிருக்கையில் அமைச்சர் மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்,

Edappadi Palanichamy alone among DMK ministers .. Photo that plunges sorrow to Admk Cadres.
Author
Chennai, First Published Sep 18, 2021, 4:44 PM IST

திமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் தனியாளாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் சுற்றி அமர்ந்திருக்க அதிமுக சார்பில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  எடப்பாடி பழனிச்சாமி மட்டும் அவர்களுக்கு மத்தியில் தனியாளாக அமர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் தமிழகத்தின் ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிடடார். இந்நிலையில் அவர் நேற்றுமுன்தினம் தமிழகத்திற்கு வருகைதந்த நிலையில் இன்று காலை 10:30  மணி அளவில் தமிழக ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டார். திமுகவின் தோழமைக் கட்சிகள் ஆர்.என் ரவியை கடுமையாக எதிர்த்த நிலையில் அவர் ஆளுநராக பதவி ஏற்றுள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Edappadi Palanichamy alone among DMK ministers .. Photo that plunges sorrow to Admk Cadres.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை, அவரது மனைவி மரணத்தை அடுத்து இறுதி சடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் அவர் மதுரையில் இருந்து வருவதால் அவர் கலந்துகொள்ளவில்லை. அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் வீற்றிருந்த நிலையில் மேடைக்கு கீழே திமுக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். அதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றி திமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில் அவர்களுக்கு மத்தியில் தனியாளாய் தனது கைப்பேசியில் எதையோ பார்த்தவாறு எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்துள்ள பகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Edappadi Palanichamy alone among DMK ministers .. Photo that plunges sorrow to Admk Cadres.

அந்த பகைப்படத்தில், அவருக்கு முன்னிருக்கையில் அமைச்சர் மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார், எடப்பாடிக்கு பின்னால் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி. ராஜா மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அமர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிமுகவை கைப்பற்றிய தான் எப்படியும் மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் மாளிகையில் திமுக அமைச்சர்களுக்கு பின்வரிசையில் தனியாளாக அமர்ந்துள்ள இந்த காட்சி அதிமுக தொண்டர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios