Asianet News TamilAsianet News Tamil

இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்... எல்லையில் திருப்பி அனுப்பப்படும் பொதுமக்கள்..!

இ-பாஸ் பெறாமல் வரக்கூடிய பொதுமக்கள் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

E pass compulsory ... Public sent back to the border ..!
Author
Tamil Nadu, First Published Apr 19, 2021, 12:16 PM IST

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,619 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,44,178 பேர் குணமடைந்துள்ளனர். E pass compulsory ... Public sent back to the border ..!

இந்நிலையில், கொரோனா 2-ம் அலை காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா செல்வோருக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 18, 237 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறாமல் வரக்கூடிய பொதுமக்கள் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios