"ஆட்சியமைக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை" - துரைமுருகன் நம்பிக்கை
தமிழகத்தில் ஆட்சி அமைக்க நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை என திமுக துணை பொது செயலாளர் துரைமுருகன் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் திமுக துணை பொது செயலளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் திமுக பொதுக்கூட்டம் நடந்தது. அதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக துணை பொதுசெயலாளர் துரைமுருகன், பேசியதாவது:-
கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த்து. அதில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம், அனைத்து மக்களும் டிவியில் பார்த்தனர். அனைவரும் அறிந்த பெரும விஷயமாகவே இதுவரை பரபரப்பாக பேசுகின்றனர்.
இதேபோல் சட்டசபை கூட்டதொடரையும், மக்கள் டிவியில் பார்க்க போகிறார்கள். அதுபற்றியும் பரபரப்பாக பேச போகிறார்கள். இந்த ஆட்சியை பற்றி அன்றைக்குதான் மக்களுக்கு தெளிவாக புரிய போகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும், திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதனால், திமுக ஆட்சி அமைக்கலாமே என கேட்கிறார்கள். இதனை, திமுக தலைவர் கருணாநிதி, மறுத்துவிட்டார். அந்த தவறை திமுக செய்யக்கூடாது என்றும், அதிமுக தயவில் நாம் ஆட்சி அமைத்தால் அதைவிட அசிங்கம் வேறு ஒன்றுமில்லை.
திமுக எனும் மிகப்பெரிய இயக்கம், மக்களை சந்தித்து, மகத்தான வெற்றி பெற வேண்டும் என கூறினார். அதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்.. அதுவரை நடக்கும் சம்பவங்களை பார்த்து கொண்டே இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.