கமல் பேசியது புரிஞ்சு போச்சா..? கதறித் துடிக்கும் திமுகவினர்..!
அன்று இந்திரா காந்தியின் நெற்றியில் மாதவிடாய் வருகிறது என கீழ்த்தரமான விமர்சனம் செய்த கலைஞரை நேரடியாக அவரைபோல் சாகும்வரை பதவி வெறியில் இருக்க மாட்டேன்னு குறிப்பிட்டே சொல்லிருக்கலாம்
தன் முதுமையில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அரசியலில் ஈடு பட மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். அவர் இப்படி கூறியது கருணாநிதியை தான் எனக்கூறி திமுகவினர் மன்னிப்பு கேள் கமல் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாகி வந்தனர்.
ஆனால், கமல் சொல்வது கருணாநிதியாகவே இருந்து விட்டுப்போகட்டும்? அதில் என்ன தவறு? என பலரும் #மன்னிப்பாவது_மயிராவது என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். கமலஹாசனுக்கு ஆதரவாக அவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
’’தான் பேசியது கலைஞர் பற்றியது இல்லை என்று அதே மேடையில் தெளிவுபடுத்திய பிறகும் கமல்ஹாசனை விமர்சனம் செய்யும் அருகதை உங்களுக்கு கொஞ்சமாவது உண்டா? அன்று இந்திரா காந்தியின் நெற்றியில் மாதவிடாய் வருகிறது என கீழ்த்தரமான விமர்சனம் செய்த கலைஞரை நேரடியாக அவரைபோல் சாகும்வரை பதவி வெறியில் இருக்க மாட்டேன்னு குறிப்பிட்டே சொல்லிருக்கலாம்’’என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.