உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு… திமுக செய்த ஸ்மார்ட் வேலை… வியந்த உடன்பிறப்புகள்
உள்ளாட்சி தேர்தல் செயல்பாடுகளுக்காக திமுக வார் ரூம் ஒன்றை அமைத்து தொண்டர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
சென்னை: உள்ளாட்சி தேர்தல் செயல்பாடுகளுக்காக திமுக வார் ரூம் ஒன்றை அமைத்து தொண்டர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
வழக்கமாக தேர்தல் என்றால் அதிமுக தான் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை முடுக்கிவிடும். இந்த முறை அப்படி நடப்பது போன்று தெரியவில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வேட்பு மனு தாக்கல் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிந்து ஒரு பக்கம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். திமுகவினரும் தங்களது தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
இந் நிலையில் அவர்களை மேலும் கண்காணிக்க மற்றும் களத்தில் அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்த வார் ரூம் ஒன்றை அமைத்து அசாலட் காட்டி உள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை கழகத்தினர் உடனுக்குடன் தெரிவிக்க,
சென்னை - அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூம் (War Room) தொடர்பு எண்கள்: 8838809244 மற்றும் 8838809285.
E-Mail: dmkcentraloffice@gmail.com
- தலைமைக் கழகம் அறிவிப்பு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.