திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!
முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாகவே தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை செய்துகொண்டார். வழக்கறிஞரும் திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான தமிழன் பிரசன்னா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் திமுக சார்பாக கலந்து கொண்டு வருகிறார்.
குடும்பத்தகராறு காரணமாக சென்னை எருக்கங்சேரியில் உள்ள வீட்டில் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையின் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தமிழன் பிரசன்னா தற்போது கொடுங்கையூர் காவல்நிலையத்தில் உள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாகவே தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.