Asianet News TamilAsianet News Tamil

எங்களை எதிர்த்து நீங்க தொழில் செய்ய முடியாது.. ஓட்டலை அடித்து நொறுக்கி திமுக பிரமுகர் அடாவடி..!

கடையிலிருந்த பாண்டியனின் மனைவி லட்சுமியிடம் “நான் திமுக கவுன்சிலர் மோகனோட அக்கா மகன். இந்த ஏரியாவுல எங்களைக் கேட்டாம எதுவும் நடக்காது. எங்கிருந்தோ வந்து இங்கு ஓட்டல் நடத்துறீங்க. எங்களை எதிர்த்து நீங்க தொழில் செய்ய முடியாது. இனியும் நீங்க போலீஸ் ஸ்டேஷன் போனால் கடையை பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவோம்.

DMK person smashes hotel in kanchipuram
Author
Kanchipuram, First Published Jun 14, 2022, 10:37 AM IST

திமுக கவுன்சிலர் அக்கா மகன் புரோட்டா கேட்டு அட்டகாசம் செய்து எங்களை எதிர்த்து நீங்க தொழில் செய்ய முடியாது என மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி, பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவியுடன் சேர்ந்து அதே பகுதியில் 'மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ்' என்ற அசைவ ஓட்டலை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டல் திறக்கப்பட்டு பத்து 10 நாட்களே ஆன நிலையில் பரோட்டா கொடுக்காத ஆத்திரத்தில் அந்த ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 

DMK person smashes hotel in kanchipuram

ஹோட்டல் திறக்கப்பட்ட நாளிலிருந்தே அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி காந்தி என்ற நபர் ஓட்டலுக்குள் நுழைந்து இல்லாத பொருட்களைக் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அந்த ஹோட்டலுக்கு வந்த சஞ்சீவி காந்தி உடனடியாக பரோட்டா வேண்டும் என கேட்டுள்ளார். மது போதையில் அவர் இருந்ததால், பரோட்டா கிடைக்க கொஞ்சம் காலதாமதம் ஆகும் என பாண்டியன் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் தனது ஆதரவாளர்களை அழைத்து வந்த சஞ்சீவி காந்தி, கடையை அடித்து நொறுக்கியுள்ளார். பின்னர், பரோட்டா மாஸ்டர் ராமசந்திரனை தாக்கிய கல்லாப் பெட்டியில் இருந்த பணதத்தையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

DMK person smashes hotel in kanchipuram

இதுதொடர்பாக பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சஞ்சீவியை பிடித்து எச்சரித்து காலையில் காவல் நிலையதத்திற்கு வருமாறு கூறி அனுப்பி விட்டனர். காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி இன்று காலையில் தனது ஆதரவாளர்களுடன் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது கடையிலிருந்த பாண்டியனின் மனைவி லட்சுமியிடம் “நான் திமுக கவுன்சிலர் மோகனோட அக்கா மகன். இந்த ஏரியாவுல எங்களைக் கேட்டாம எதுவும் நடக்காது. எங்கிருந்தோ வந்து இங்கு ஓட்டல் நடத்துறீங்க. எங்களை எதிர்த்து நீங்க தொழில் செய்ய முடியாது. இனியும் நீங்க போலீஸ் ஸ்டேஷன் போனால் கடையை பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவோம் ” என மிரட்டி விட்டு சென்றுள்ளார். திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து திமுக கவுன்சிலர் மற்றும் அவரது உறவினர்கள் அராஜகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios