Asianet News TamilAsianet News Tamil

வெட்கங்கெட்ட செயல்களை வெளிப்படையா செய்யிற நீ பேசலாமா? முகத்திரையை கிழித்து தொங்கவிடும் முரசொலி...

வெட்கம்  என்பதன்  பொருளறியாது,பல  வெட்கங்கெட்ட  செயல்களை  வெளிப்படையாகச் செய்து கொண்டிருப்பவர், நம்மைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்கிறார்! முரசொலியில் கமலை தாறுமாறாக விமர்சித்துள்ளது திமுக.

Dmk murasoli condemns against kamalhassan
Author
Chennai, First Published Feb 18, 2019, 11:34 AM IST

கமல்ஹாசன்  நேற்று கல்லூரி  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  பேசியபோது,  திமுக தலைவரை ஸ்டாலினை, நான் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன்’’ என விமர்சித்து பேசினார். மேலும்,  தன்னைப்பார்த்து காப்பி அடித்துதான் கிராம சபை கூட்டத்தை நடத்துகிறார் என ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.

கமல்ஹாசனின் இந்த காரசார பேச்சுக்கு "கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் என்ற தலைப்பில்" பதிலடி கொடுக்கும் விதமாக முரசொலி வெளியிட்ட கட்டுரையில்,   ’’கடை விரித்தேன் கொள்வாரில்லை’’என்ற நிலையில் உள்ளவன் எந்த மனநிலைக்கு ஆளாவானோ அந்த மனநிலையில் கலைஞானி கமல்ஹாசன் நிதானமற்று பிதற்றத்தொடங்கிவிட்டார்.  அவர் எந்த அளவு நொந்து நூலாகியிருக்கிறார் என்பதை எம்.ஆர்.சி. நகரில் மாணவர்களிடையே  நடத்திய  கலந்துரையாடலில்,  அவர்  கொதிக்கும்  எண்ணெய்ச்  சட்டியில்  போட்டகடுகாக வெடித்ததிலிருந்தே  அறிய  முடியும்!
 

Dmk murasoli condemns against kamalhassan

நான்  சட்டையைக்  கிழித்துக்  கொள்ளமாட்டேன்  என,சம்பந்தமில்லாது,  அவலை  இடிப்பதாக  நினைத்து  உரலை இடித்துள்ளார்  கமல்! அவர் பேசுவது  என்ன;  ஏன்  இப்படிப்  பேசுகிறார்  எனப்புரியாது; கேட்போரை எல்லாம் சட்டையைக் கிழித்துக் கொள்ளவைப்பாரே  தவிர,  அவர் சட்டையை  ஒருநாளும்  கிழித்துக்கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும்!

கிராம சபை என்பதைத் தான்தான் முதன்முதலாக நடத்தியதாகவும்,  அதனை  ஸ்டாலின்  காப்பி  அடித்துள்ளார்  என்றும்கூறி, காப்பி அடிக்க வெட்கமில்லையா எனத் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை  வெளிச்சம்  போட்டுக்  காட்டியுள்ளார் கமல்!   அதாவது அவருக்கு சொந்தப் புத்தியும் கிடையாது, சொல்புத்தியும்  இல்லை;  அரசியல்  வரலாறுகளைப்  படித்தறியும் பக்குவமும்  கிடையாது  என்பதற்கு  இதனைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு  தேவையில்லை! அவர்  நடத்திய  கிராமசபைக்  கூட்டம்  கூட  அவர்  மண்டையில்  உதித்ததல்ல;  சட்டப்  பஞ்சாயத்து நடத்துபவர்கள்  கூறிய ஆலோசனை  எனக்  கூறி,  தனக்கு  சொந்தப்  புத்தி  இல்லை என்பதைப்  பறைசாற்றி  அறிவித்துள்ளார்.  இந்த கிராமசபைக்  கூட்டத்தை  தலைவர்  கலைஞர்  முதல்வராக  இருந்தபோதே, தனது  அமைச்சரவையிலுள்ள  அமைச்சர்களைக்  கொண்டு நடத்தியுள்ளார்:    அவரே பங்கேற்று நடத்திய  கூட்டம், அன்று வடஆற்காடு மாவட்டம் -  வாணியம்பாடி   தொகுதியிலுள்ள   விண்ணமங்கலம்   கிராமத்தில் தொடங்கி  வைக்கப்பட்டது!

Dmk murasoli condemns against kamalhassan

 கமலஹாசனுக்கு  இதெல்லாம் தெரிய நியாயமில்லை; அந்தக் காலகட்டத்தில், அவர் ஏதாவது கதாநாயகியுடன்  `டூயட்’  பாடி,  ஆடிக்  கொண்டிருந்திருப்பார்! அதனால்தான்,  அவருக்கு  வரலாற்று  அறிவும்  மட்டு  என்று கருதுகிறோம்! இந்த வரலாறுகளெல்லாம் தெரியாததால்தான்,நேற்று  வந்த  சின்னப்பயலைக்  காப்பியடிக்க வெட்கமில்லையா? எனக் கேட்டு, தனது சின்னப்பிள்ளைத்தனத்தை,  அவரே  வெளிச்சம்  போட்டுக்காட்டியிருக்கிறார்! 

திராவிட  முன்னேற்றக்  கழக  வரலாற்றை முதலில்  கமலஹாசன்  படித்தறிய  வேண்டும்!  எங்கள்  இயக்கத்  தலைவர்கள்,  முன்னோடிகள்;அது தந்தை  பெரியாராக  இருந்தாலும்,  பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்றோரும், ஏன்;எங்களது  இன்றைய  தலைவர்    ஸ்டாலின் ஆனாலும்.  அவர்கள்  கால்  பதியாத  மண்,  அதுநகரமாக இருந்தாலும், கிராமமாக - குக்கிராமமாக இருந்தாலும் தமிழகத்தில்  இருக்க  முடியாது. இந்தத் தமிழ் மண்ணின் ஒவ்வொரு துளியிலும் அவர்களது பாதச்  சுவடு  பட்டுள்ளது.  அதனால்தான்  அரசியல்  ஜாம்பவான்களால்  கூட தி.மு.கழகத்தை  அசைத்திட  முடியவில்லை!  தி.மு.கழகத்தை  அழித்து,  அது  இருந்த  இடத்தில்  புல்முளைக்கச் செய்துவிடுவோம் எனச் சவால் விட்ட இயக்கங்கள் எல்லாம்  காணாமல்  போனதே  தவிர,  கழகம்  இன்றும்  ஆழவேரூன்றி தழைத்தோங்கி நிற்கிறது என்றால், அதன் காரணமே,அது  நகரங்கள்  மட்டுமின்றி,  குக்கிராமம்  வரை,  ஆழ  வேர்பதித்து, அடித்தட்டு  மக்கள்  வரை  அது  படர்ந்துள்ளதால்தான் என்பதை கமலஹாசன் உணராமல் பிதற்றக் கூடாது!

Dmk murasoli condemns against kamalhassan

திராவிட  முன்னேற்றக்  கழக  வரலாற்றை முதலில்  கமலஹாசன்  படித்தறிய  வேண்டும்!  எங்கள்  இயக்கத்  தலைவர்கள்,  முன்னோடிகள்;அது தந்தை  பெரியாராக  இருந்தாலும்,  பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்றோரும், ஏன்;எங்களது  இன்றைய  தலைவர்    ஸ்டாலின் ஆனாலும்.  அவர்கள்  கால்  பதியாத  மண்,  அதுநகரமாக இருந்தாலும், கிராமமாக - குக்கிராமமாக இருந்தாலும் தமிழகத்தில்  இருக்க  முடியாது. இந்தத் தமிழ் மண்ணின் ஒவ்வொரு துளியிலும் அவர்களது பாதச்  சுவடு  பட்டுள்ளது.  அதனால்தான்  அரசியல்  ஜாம்பவான்களால்  கூட தி.மு.கழகத்தை  அசைத்திட  முடியவில்லை!  தி.மு.கழகத்தை  அழித்து,  அது  இருந்த  இடத்தில்  புல்முளைக்கச் செய்துவிடுவோம் எனச் சவால் விட்ட இயக்கங்கள் எல்லாம்  காணாமல்  போனதே  தவிர,  கழகம்  இன்றும்  ஆழவேரூன்றி தழைத்தோங்கி நிற்கிறது என்றால், அதன் காரணமே,அது  நகரங்கள்  மட்டுமின்றி,  குக்கிராமம்  வரை,  ஆழ  வேர்பதித்து, அடித்தட்டு  மக்கள்  வரை  அது  படர்ந்துள்ளதால்தான் என்பதை கமலஹாசன் உணராமல் பிதற்றக் கூடாது!

அறிவுலக  ஆசான்  அறிஞர்  அண்ணா,  தி.மு.கழகத்தினருக்குக் கற்றுத் தந்த பால பாடமே,``மக்களிடம்  செல்! அவர்களோடு  கலந்திடு! அவர்களை  அறிந்துகொள்!அவர்களை  நேசித்துப்  பணியாற்று! அவர்களோடு  இணைந்து  திட்டமிடு! அவர்கள் அறிந்ததிலிருந்து  தொடங்கு! அவர்கள் எண்ணங்களுக்கு வடிவமைத்திடு!’’-  என்பதுதான்.  முதலமைச்சர்  கனவில்  கட்சி  ஆரம்பித்து, அதனைக்  கொள்வாரில்லை  என்பது தெரிந்துவிட்ட  நிலையில்,  விரக்தியின்  உச்சக்  கட்டத்தில் நின்று  கமலஹாசன்  புலம்பத்  தொடங்கியுள்ளார்!

Dmk murasoli condemns against kamalhassan

தலைவர் ஸ்டாலின் மீது பாய்கிறார்; ரஜினி மீது விஷத்தைக்   கக்குகிறார்;   தன்னைத்   தானே‘சின்னப்பயல்’,  ‘நேற்று  வந்த  பயல்’  எனக்  கூறிக்கொள்கிறார்.  வெட்கம்  என்பதன்  பொருளறியாது,பல  வெட்கங்கெட்ட  செயல்களை  வெளிப்படையாகச் செய்து கொண்டிருப்பவர், நம்மைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்கிறார்! இதை எல்லாம் பார்க்கும்போது  உச்சகட்ட  காட்சியாக,  ``மூன்றாம்  பிறை’’  திரைப்படத்தில்  ரயில்  நிலையத்தில்,  தலைமுடியைப்  பிய்த்துக்  கொண்டு,சட்டையைக்  கிழித்துக்  கொண்டு,  பிளாட்பாரத்தில்  அங்குமிங்கும்  ஓடுவாரே,  அந்தக்  காட்சிகள்  நிஜத்தில்  நடந்துவிடுமோ  என்று  அஞ்சுகிறோம்!  அரசியல்  கட்சி  துவங்கி,  எதனை  நோக்கிச்  செல்கிறோம்,பின்னால்  வருபவர்களை  எங்கே  அழைத்துச்  செல்லப்  போகிறோம்  என்று  தெளிவற்றுத்  திரியும்  கமலஹாசன்,  மற்றவர்களைப்  பார்த்து  வெட்கமில்லையா  எனக்  கேட்பது  கேலிக்கூத்தல்லவா?

Dmk murasoli condemns against kamalhassan

மாணவர்கள்  சந்திப்பு  நிகழ்ச்சியில்,  கமலஹாசன்  தனது அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தை  வெளிச்சம்  போட்டுக்காட்டியுள்ளார்! நமது ஊடகத் துறையினர், கமலஹாசன் இந்த மாணவர் சந்திப்பில் நமது கழகத் தலைவர் தளபதி குறித்துத்தரக்குறைவாக  பேசியது  பற்றி  புதுவையில்  அவரிடம்,``கமல்   உங்களைக்   கடுமையாக   விமர்சனம்   செய்துகொண்டிருக்கிறாரே!’’  எனக்  கேள்வி  கேட்டபோது, "நான்அரசியல்  பற்றி  பேசிக்  கொண்டிருக்கிறேன்"  என  பதிலளித்தாரே, அது ஒன்றே கமலஹாசனுக்கு வைத்த சூடல்லவா! புத்திசாலித்தனமாகப்  பேசுவதாக  நினைத்து  உளறிய கமலஹாசனின்   `புத்திசாலித்தனத்தை’,   ஒரே   வரியில் பல்லிளிக்க வைத்து விட்ட பதில் அல்லவா அது!‘நல்ல  மாட்டுக்கு  ஒரு  சூடு’  போதும்  என்பார்கள். கமலஹாசன் மேலும் ‘சூடு’களை எதிர்நோக்கமாட்டார் எனக்கருதுகிறோம் என சவுக்கடி கொடுக்கும் விதமாக கட்டுரையை வெளியிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios