Asianet News TamilAsianet News Tamil

திமுக ஆட்சி அமையட்டும்... அதுக்கப்புறம் நடக்கிற மட்டும் பாருங்க... திண்டுக்கல் லியோனி..!

இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமையும். அப்போது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். நிலுவை ஓய்வூதியத்தொகை வழங்கப்படும் என கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார். 

DMK is in power, the problem of transport workers will be solved... dindigul leoni speech
Author
Tirunelveli, First Published Dec 6, 2020, 6:41 PM IST

இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமையும். அப்போது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். நிலுவை ஓய்வூதியத்தொகை வழங்கப்படும் என கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார். 

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பிரசாரம் பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று தொடங்கியது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார். 

DMK is in power, the problem of transport workers will be solved... dindigul leoni speech

அப்போது பேசிய அவர்;- விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற லட்சிய பாதையில் பயணித்து வருகிறோம். இதில் 17 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றி வருகின்றனர். நான் நெல்லை மாவட்டத்தில் எனது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளேன். இங்கு பேசியவர்கள், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கூறினார்கள். இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமையும். அப்போது அவர்களுக்கான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். நிலுவை ஓய்வூதியத்தொகை வழங்கப்படும். சம்பள பிரச்சினை தீர்க்கப்படும்.

DMK is in power, the problem of transport workers will be solved... dindigul leoni speech

தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்து தேர்தல் வாக்குறுதியாக தயாரிக்கப்படுகிறது. இந்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும். அம்பை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய 2 அணைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளேன். அவர் திமுக தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கை வைத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஸ்டாலின் விரைவில் முதல்வராவார். இதற்காக நாம் அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios