தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும்  தேமுதிக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா அதிரடியாக முடிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும், திருப்பரங்குன்றம், , திருவாரூர் தொகுதிகளில் எம்எல்ஏக்கள் மறைந்துவிட்டதாலும் மொத்தம் 20 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. அந்ததொகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில் இந்த 20 தொகுதிகளிலும், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில்போட்டியிடுவதுகுறித்து, கட்சிநிர்வாகிகளிடம், பிரேமலதாரகசியகருத்துகேட்புநடத்திவருகிறார்

தேமுதிக தலைவர்விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரால் முழுமையாக அரசியல்பணிகளில்ஈடுபடமுடியவில்லை. இதனால், தன்மனைவிபிரேமலதாவிடம், கட்சிபணிகளைஒப்படைத்துஉள்ளார்.

இதையடுத்து பிரேமலதாவிற்கு, மாநிலபொருளாளர்பதவிவழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சியைபலப்படுத்தும்பணிகளில், பிரேமலதாகவனம்செலுத்திவருகிறார். பல்வேறுஅணிநிர்வாகிகளுடன், நாள்தோறும், அவர்ஆலோசனைநடத்திவருகிறார்.

இந்தஆலோசனைகூட்டங்களில், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்குஇடைத்தேர்தல்நடந்தால், அதில் தேமுதிகபோட்டியிடுவதுகுறித்து, கருத்துகேட்டுவருகிறார்.

இந்நிலையில் கட்சிநிர்வாகிகளிடம் பேசிய பிரேமலதா , 'கட்சிபணிகளுக்கு, கூடுதல்நேரம்செலவிடவேண்டும். பொறுப்பில்இருப்பவர்கள், செயல்படாமல்இருந்தால், பதவிபறிக்கப்படும்' என்று எச்சரித்தார்.

இருபதுசட்டசபைதொகுதிகளுக்குஇடைத்தேர்தல்நடந்தால், அதில்போட்டியிடுவதுகுறித்தும்,பிரேமலதா கருத்துகேட்டுவருகிறார். அதற்குபலநிர்வாகிகள், 'போட்டியிடவேண்டும்' என்று, கூறிவருவதாக தெரிவந்துள்ளது.

தேர்தல்அறிவிப்புவெளியிடப்பட்டபின், மாவட்டசெயலர்களுடன்ஆலோசித்து, நல்லமுடிவுஎடுப்பதாக, பிரேமலதாதெரிவித்துள்ளதாக அக்கட்சிவட்டாரத்தில்கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்சியினருடன்ஆலோசனைநடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய , பிரேமலதாஎந்ததேர்தலைஅறிவித்தாலும், அதைசந்திப்பதற்கு, தேமுதிகஎப்போதும்தயாராகஇருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டசபைக்கும்தேர்தல்வருவதற்கானவாய்ப்புஇருப்பதாக, எங்களுக்குதகவல்வருகிறது.இதனை சந்திப்பதற்கு, ஆளும்கட்சியினர்பயப்படுகின்றனர். ஆனால், தேமுதிகவுக்கு தேர்தல் குறித்த பயம் இல்லை என அதிரடியாக தெரிவித்தார்.