கால்நடைகளுக்காக கதறிய கேப்டன் விஜயகாந்த்..!! இதயம் உள்ள ஒவ்வொருவரையும் நெகிழவைத்தார்..!!
எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .
கால்நடைகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அவைகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார் வௌவால் மூலமாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதை மேற்கோள் காட்டியுள்ள விஜயகாந்த் , கால்நடைகளுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் . கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் இந்தியாவில் 12,456 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது , சுமார் 423 பேர் உயிரிழந்துள்ளனர் . 1513 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் , இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது , அங்க 3 ஆயிரத்து 81 பேருக்கு ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது . டெல்லியில் 1578 பேருக்கும் , தமிழகத்தில் 1242 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது .
ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் , உத்தரப் பிரதேசம் , குஜராத் , உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன . இந்நிலையில் தமிழகத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது . இதுவரையில் தமிழகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த வைரஸ் சமூகப் பரவலாக மாறுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது . இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் தவித்து வருகின்றனர் , சாலைகள் தெருக்கள் என நாடே வெறிச்சோடி காணப்படுகிறது . மக்களைச் சார்ந்து வாழ்ந்து வரும் ஆடு , மாடு , கோழி , நாய் , பூனை உள்ளிட்ட கால்நடைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. நாய் உள்ளிட்ட விலங்குகள் குடிக்க தண்ணீர்கூட கிடைக்காமல் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன . இந்த துயர நிலை குறித்து தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் , தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார் அதில், கொரோனா வைரசிலிருந்து தமிழக மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போல் , நம்மை சார்ந்துள்ள ஆடு , மாடு , கோழி , நாய் , பூனை போன்ற பல்வேறு கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பல கால்நடைகள் உணவு மற்றும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன. மேலும் கால்நடைகளுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது , வௌவால்கள் மூலம் கொரோனா பரவ ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அண்மையில் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் . கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தனது கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மக்களுக்காக கல்லூரியை வழங்கியுள்ள நிலையில் , தற்போது உணவு குடிநீர் இன்றி தவித்து வரும் கால்நடைகளின் மீது விஜயகாந்த் கரிசனம் காட்டியிருப்பது , அவரது தொண்டர்களை மட்டுமல்ல மாந்தநேயம் உள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.