நீதிபதியிடமே "டீ" கேட்ட திவாகரன்..! துருவி துருவி கேட்ட கேள்வியால் பயங்கர தலைவலி..!
சசிகலாவின் சகோதரர்,ஜெயலலிதாவின் மரணமா குறித்த ஆறுமுக சாமியின் விசாரணை கமிஷன் முன்பு முதன் முறையாக இன்று ஆஜரானார்
அப்போது நீதிபதி ஆறுமுக சாமி முன், ஐந்து மணி நேரம் விசாரணை நடைப்பெற்றது.
விசாரணையில், ஜெயலலிதா உயிருடன் உள்ள போது இரண்டு முறை அவரை பார்க்க முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் அவரை உயிருடன் பார்க்க முடியவில்லை.. இறந்த பிறகே நான் நேரில் பார்த்தேன் என திவாகரன் தெரிவித்து உள்ளார்
விசாரணைக்கு இடையே தலைவலியால் அவதிப்பட்ட திவாகரன், நீதிபதியிடம் டீ கேட்டு உள்ளார்.
உடனே, உதவியாளர்கள் அவருக்கு டீ கொண்டு வந்து கொடுக்க, டீ அருந்திவிட்டு பெருமூச்சி விட்ட திவாகரன்,பின்னர் தான் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார்
திவாரகரனுக்கு தலை வலி வரும் அளவிற்கு, துருவி துருவி கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.
மேலும், கேட்ட கேள்விக்கெல்லாம் தொடர்ந்து பதில் அளித்து வந்த திவார்கரனுக்கு தலைவலியே அதிகமாகி விட்டதாம்.
அவருடைய தலைவலிக்கு காரணம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட பல கேள்விகளும் காரணம் என கிசு கிசுக்கப்புகிறது.