அதிமுக கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து கணவன், மனைவி இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

அதிமுக கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து கணவன், மனைவி இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த

VR.அருணாச்சலம் (வீரபாண்டி பால் உற்பத்தியாளர்கள்கூட்டுறவு துணைத் தலைவர்)

அமுதா அருணாச்சலம் (வீரபாண்டி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர்)

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளனர்.