Asianet News TamilAsianet News Tamil

வாரணாசி பன்னீர்செல்வம் வாயடைத்துப் பேசணும்... விடாமல் வச்சி வெளுக்கும் தினகரன்!!

தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்க்கொழுப்பு என்று சொல்லும் வாரணாசி பன்னீர்செல்வம் வாயடைத்துப் பேச வேண்டும் என் தினகரன் காட்டமாக பேசியுள்ளார்.  

Dinakaran Political campaign at Ottapidaram
Author
Chennai, First Published May 12, 2019, 9:54 AM IST

தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்க்கொழுப்பு என்று சொல்லும் வாரணாசி பன்னீர்செல்வம் வாயடைத்துப் பேச வேண்டும் என் தினகரன் காட்டமாக பேசியுள்ளார்.  

காலியாக உள்ள 4 தொகுதி இடைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துவருகிறது. நான்கு தொகுதிகளிலும் மையமிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து,  தினகரன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட தினகரன், அதிமுக மூடப்போகிற கம்பெனி. தொண்டர்கள் எல்லாம் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். டெண்டர் கோஷ்டிகள் மட்டும்தான் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள். இடைத் தேர்தலில் சுந்தர்ராஜன் வெற்றிபெற்றவுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்கிறேன் என்று சொன்னால் அவருக்கு 100 கோடி ரூபாய் தர தயாராக இருக்கிறார்கள்.

Dinakaran Political campaign at Ottapidaram

பன்னீர்செல்வம் பிரச்சாரத்தின்போது பெண்களெல்லாம் கண்டுகொள்ளாமல் நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் அம்மா, தாயே என்று கெஞ்சுகிறார் பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுடன் சேர்ந்து சதிசெய்வதாகக் கூறுகிறார்கள். அவர் சொல்றது சரிதான். அனைவரும் சேர்ந்துதானே ஆட்சியைக் கவிழ்க்க முடியும்? நம்மிடம் இப்போ 4 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இடைத் தேர்தலில் 22 தொகுதிகளிலும் நாங்க வெற்றிபெற்றால், திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்துதானே தோற்கடிக்க முடியும் எனப் பேசினார்.

தொடர்ந்துப் பேசிய அவர், பன்னீர்செல்வம் பால் வியாபாரம் செய்துகொண்டிருந்தவர். தற்போது அவருடைய மகன் ரவீந்திரநாத் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுக்கிறார். அவர் என்ன மாந்தோப்பை விற்றா கொடுக்கிறார்? தேனியில் தங்க தமிழ்ச்செல்வன்தான் வெற்றிபெறுவார். தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்க்கொழுப்பு என்கிற வாரணாசி பன்னீர்செல்வம் வாயடைத்துப் பேச வேண்டும் என்றும் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios