dhanabal speech in assembly

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் சபாநாயகர் தனபால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து உருக்கமாக பேசினார்.

ஜூன் 14 ஆம் தேத துவங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சபாநாயகர் தனபால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து உருக்கமாக பேசினார்.

சட்டப்பேரவையில், எதிர்கட்சிகளுக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா தெரிவித்ததாக தனபால் கூறினார்.

அவையில், ஜெயலலிதா பேச்சு குறித்தும், அவரின் நடவடிக்கைகளையும் நினைவுபடுத்தி பேசினார் சபாநாயகர். மேலும் பேசிய அவர், நடப்பு கூட்டத் தொடர் 37 நாட்களும், 194.44 மணி நேரமும் நடைபெற்றதாக கூறினார்.

எதிர்கட்சி உறுப்பினர்கள் உரையாட அதிக நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் சபாநாயகர் கூறினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, அவைக்கு 12 பேர் வராதது வருத்தம் என்று கூறினார். 

நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அணியினர் அவைக்கு வரவில்லை. இதனை சபாநாயகர் சூசகமாக தெரிவித்தார். நடப்பு கூட்டத் தொடரில் 25 மசோதாக்கல் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் உண்மைத் தம்பி பழனிசாமி என்று கூறிய அவர், சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.