Asianet News TamilAsianet News Tamil

பிரச்சாரத்தின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!

டெல்லியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

delhi chief minister attack in campaign
Author
Delhi, First Published May 4, 2019, 6:27 PM IST

டெல்லியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மோட்டி நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். திறந்த வாகனத்தில் நின்றபடி, அவருடைய தொண்டர்கள் புடை சூழ பிரச்சாரம் செய்து கொண்டு வந்த அவரின் வானம் மீது ஏறிய மர்ம நபர் ஒருவர், அவரை கன்னத்தில் அறைந்தார்.

உடனடியாக அவரை, அவரது கட்சி தொண்டர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த செயலை செய்த நபர் யார்? என்ன நோக்கத்தில் செய்தார் என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios