நான் அரசியலுக்கு வருவதை பலர் எதிர்க்கின்றனர். பிரபல பத்திரிக்கைகள் , வலைதளங்களும் நான் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்று தீபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இது குறித்து பேட்டியளித்த தீபா


புதிய அமைப்பு தொடங்குவது குறித்து கருத்து கேட்டு வருகிறேன். தொண்டர்கள் விருப்பபட்டால் , மக்கள் விருப்பபட்டால் கட்டாயம் அனைத்து தேர்தல்களிலும் ஈடுபடுவோம். நான் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன்.


என்னை நம்பி இருக்கும் தொண்டர்களை ஏமாற்ற மாட்டேன். சமூக வலைதளங்களிலும் , பிரபல பத்திரிக்கைகளிலும் நான் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை இது வருந்ததக்கது. இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க கூடாது.


 நான் மெரினாவுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுக்க வந்தேன். என்னைப்பற்றி தவறான தகவல் பரப்பபடுகிறது. என்ன ஆனாலும் நான் அரசியலைவிட்டு விலக மாட்டேன். தொண்டர்கள் கருத்தை முழுமையாக அறிந்த பின்னர் தீக்கமான முடிவை அறிவிப்பேன் இவ்வாறு தீபா பேட்டி அளித்தார்.