The party has own name commenced the political experience to deepa
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, கரூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, இதில் கலந்து கொண்டு பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கூறியதாவது:
ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட நிலையான ஆட்சியை யாராலும் வீழ்த்த முடியாது.
புதிய இயக்கங்களை யார் துவங்கினாலும், மக்கள் அதிமுக பக்கம் இருகிறார்கள்.
அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றப் போவதாக கூறும் தீபா அ.தி.மு.க.வின் உறுப்பினராக கூட இல்லை.
சொந்த பெயரில் கட்சி தொடங்கியபோதே தெரிகிறது தீபாவிற்கு அரசியல் அனுபவம் இல்லை என்பது.
ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்திக்காத ஓ.பன்னீர்செல்வம் தற்போது மக்களை சந்திக்கப் போவதாக கூறுகிறார்.
