Asianet News TamilAsianet News Tamil

பூட்டப்பட்ட வீட்டிற்குள் நிர்வாண நிலையில் மரணம்.. சென்னையில் அதிரவைக்கும் கொடூரம்.

பூட்டிய வீட்டுக்குள் 53 வயது ஆண்  நிர்வாண நிலையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  கணவனின் சடலத்துடன் 2 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி இருந்ததும் தெரியவந்துள்ளது. 

Death in a naked state inside a locked house .. A shocking atrocity in Chennai.
Author
Chennai, First Published May 24, 2022, 1:39 PM IST

பூட்டிய வீட்டுக்குள் 53 வயது ஆண்  நிர்வாண நிலையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  கணவனின் சடலத்துடன் 2 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை, ஆட்கடத்தல், தற்கொலை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னரும் அதிர்ச்சிகர தகவல்கள் புதைந்து கிடக்கின்றன, அது விசாரணையின்போதேஅதில் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகிறது. இந்த வரிசையில் பூட்டிய வீட்டில் 55 வயது நபர் இறந்து கிடந்த சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கம் வைக்கோல் காரன் தெருவை  சேர்ந்தவர் அசோக் பாபு (53) வயது என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களும் படிக்க வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். அதில் திருமணமான அவரது மூத்த மகள் தனது கணவர் குடும்பத்தோடு வெளியூரில் வசித்து வருகிறார்.

Death in a naked state inside a locked house .. A shocking atrocity in Chennai.

இந்நிலையில் மூத்த மகள் ஆர்த்தி கடந்த இரு தினங்களாக தனது தந்தை அசோக் பாபுவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அசோக் பாபு 2 நாட்களாக போனை எடுக்கவில்லை, இதனால் பதற்றமடைந்த மகள் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் போலீசார் அசோக் பாபுவின் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தனர்,அப்போது உள் பக்கமாகத் தாழிட்ட நிலையில் அசோக் பாபு நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்தார். அதே வீட்டில் மற்றொரு அறையில் அவரது மனநிலம் பாதிக்கப்பட்ட மனைவி பத்மினி (48) இருந்தார். அவரும் தனது இறந்துபோன கணவனின் சடலத்துடன் 2 நாட்களாக இருந்துள்ளார் இந்நிலையில் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Death in a naked state inside a locked house .. A shocking atrocity in Chennai.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வேப்பேரி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருவதுடன் அசோக் பாபுவின் சடலத்துடன் இரு தினங்களாக வாழ்ந்து வந்த அவரின் மனைவி பத்மினியை  மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் இது கொலையா தற்கொலையா, அப்படியெனில் யார் செய்திருக்கக் கூடும் என விசாரித்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios