Asianet News TamilAsianet News Tamil

வீட்டு வேலை செய்யவந்தவர் வீட்டுக்கே முதலாளியாக நினைக்கக்கூடாது.. சசிகலாவை கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகம்.!

எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை வழங்கியதாக சசிகலா கூறிவருகிறார். எம்ஜிஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் அவரை எம்ஜிஆரின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டாா்கள். சசிகலாவால் அதிமுகவையும், தொண்டா்களையும் அசைத்துக்கூடப் பாா்க்க முடியாது என்றார்.

CV Shanmugam slams sasikala
Author
viluppuram, First Published Jul 6, 2021, 10:48 AM IST

எம்ஜிஆருக்கே ஆலோசனை வழங்கியதாக கூறும் சசிகலாவை, எம்ஜிஆரின் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி பல்வேறு ஆலோசனைகளும், அறிவுரைகளையும் வழங்கினார். 

CV Shanmugam slams sasikala

அப்போது, பேசிய அவர் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார். 1972-இல் அதிமுக தொடங்கப்பட்ட போது 1973-இல் கருணாநிதி தலைமையில் திருமணம் செய்துகொண்டவா் சசிகலா. ஆனால், எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை வழங்கியதாக சசிகலா கூறிவருகிறார். எம்ஜிஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் அவரை எம்ஜிஆரின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டாா்கள். சசிகலாவால் அதிமுகவையும், தொண்டா்களையும் அசைத்துக்கூடப் பாா்க்க முடியாது என்றார்.

CV Shanmugam slams sasikala

இந்த அளவிற்கு தரமற்ற பேசினால் எங்களுக்கு பேச தெரியும். நீங்கள் யார் என்ன செய்தீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நாங்களும் பேசுவோம். எம்ஜிஆருக்கு ஒரே சொந்தம் இரட்டை இலையும், அதிமுக தொண்டர்கள் தான். வீட்டு வேலை செய்யவந்தவர் வீட்டுக்கே முதலாலியாக நினைக்கக்கூடாது, உள்ளாட்சி தேர்தலில் நாம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் அதற்காக பாடுபடுங்கள் என கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios