Asianet News TamilAsianet News Tamil

மாட்டு கோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்... ரகசியம் சொன்ன பிஜேபி வேட்பாளர்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன் என பிஜேபி வேட்பாளர் கூறியிருக்கிறார்.

Cow urine cured my breast cancer  Sadhvi Pragya
Author
Malegaon, First Published Apr 23, 2019, 11:24 AM IST

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன் என பிஜேபி வேட்பாளர் கூறியிருக்கிறார்.

2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில் பாஜக சார்பில் போபால் மக்களவைத் தொகுதியில் இவர் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாடுகள் பல இடங்களில் கொடுமைப்படுத்தும் விதம் மிகவும் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. உண்மையில் மாடுகள் மற்றும் மாடு சார்ந்த தயாரிப்புகளில் மனிதனுக்கு நிறைய நன்மைகள் உள்ளன எனக் கூறினார்.

அதில் பெரிய விஷயம் என்னவென்றால், மாட்டின் சிறுநீரை அருந்தியதின் மூலம் தான் எனக்கு வந்த புற்றுநோய் குணமானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன்" என தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios