Asianet News TamilAsianet News Tamil

பஸ் கட்டண உயர்வு.. நாங்க ஒண்ணும் பண்ண முடியாது - கைவிரித்த ஹைகோர்ட்

court can not interfere in government decision said high court
court can not interfere in government decision said high court
Author
First Published Jan 24, 2018, 11:53 AM IST


பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 19ம் தேதி அறிவித்து அதற்கு மறுநாளான 20ம் தேதியிலிருந்து பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது. சுமார் 50%லிருந்து 100% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதிநெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

court can not interfere in government decision said high courtபேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

court can not interfere in government decision said high court

இதற்கிடையே, பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. சலுகைகள், மானியங்கள் வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் கூட அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது.

court can not interfere in government decision said high court

court can not interfere in government decision said high court

ஆனால், புதிய பேருந்து கட்டண அட்டவணையை பேருந்துகளில் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டு, மனுக்களை தள்ளுபடி செய்தது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios