Asianet News TamilAsianet News Tamil

கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வருசம் வரை நீட்டிப்பு..! கேரள அரசு அதிரடி அறிவிப்பு.!

இறுதிச் சடங்குகளில், ஒரு நேரத்தில் அதிகபட்ச பங்கேற்பாளர்கள் இருபது நபர்களைத் தாண்டக்கூடாது. அவர்கள் அனைவரும் முககவசம், சானிட்டைசரைப் பயன்படுத்துவது மற்றும் நபர்களுக்கு இடையே ஆறு அடி சமூக தூரத்தை வைத்திருக்க வேண்டும். கொரோனாவால் ஏற்பட்ட மரணம் என்று சந்தேகிக்கப்பட்டால், இந்திய அரசும் மாநில அரசும் வழங்கிய நிலையான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
 

Corona regulations extend until next year ..! Kerala Government Action Notice
Author
Kerala, First Published Jul 5, 2020, 11:09 PM IST

கேரள மாநிலம் 2021 ஜூலை வரை மாநிலத்தின் கொரோனா விதிமுறைகளை அமல்படுத்தும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு முககவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

Corona regulations extend until next year ..! Kerala Government Action Notice

கேரளாவில் ஜூலை 2021 வரை இருக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து நபர்களும் தங்கள் வாய் மற்றும் மூக்கை அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், பொதுமக்கள் அணுகக்கூடிய எந்த இடத்திலும், அனைத்து வகையான வாகனங்களிலும், போக்குவரத்தின் போதும் முககவசத்தில் மூலம் கட்டாயம் மறைக்க வேண்டும்.அனைத்து பொது இடங்களிலும் செயல்பாடுகளிலும் இரு நபர்களுக்கு இடையே ஆறு அடி தூரத்தை அனைத்து நபர்களும் பராமரிக்க வேண்டும்.

அனைத்து திருமண விழாக்களிலும் அதன் பின்னர் எந்த செயல்பாடுகளிலும் ஒரு நேரத்தில் அதிகபட்ச பங்கேற்பாளர்கள் ஐம்பது நபர்களை தாண்டக்கூடாது. அத்தகைய விழாக்கள், செயல்பாடுகளில் உள்ள அனைத்து நபர்களும் சானிட்டைசரைப் பயன்படுத்த வேண்டும். முக கவசம் அணிந்து ஆறு அடி சமூக தூரத்தை பின்பற்றுவது கட்டாயம். திருமணம் அல்லது செயல்பாடுகளின் அமைப்பாளர்கள் பங்கேற்பாளர்களின் பயன்பாட்டிற்கு சானிட்டைசரை வழங்குவார்கள்.

Corona regulations extend until next year ..! Kerala Government Action Notice

இறுதிச் சடங்குகளில், ஒரு நேரத்தில் அதிகபட்ச பங்கேற்பாளர்கள் இருபது நபர்களைத் தாண்டக்கூடாது. அவர்கள் அனைவரும் முககவசம், சானிட்டைசரைப் பயன்படுத்துவது மற்றும் நபர்களுக்கு இடையே ஆறு அடி சமூக தூரத்தை வைத்திருக்க வேண்டும். கொரோனாவால் ஏற்பட்ட மரணம் என்று சந்தேகிக்கப்பட்டால், இந்திய அரசும் மாநில அரசும் வழங்கிய நிலையான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி ஒன்றுகூடுதல், ஊர்வலங்கள், தர்ணா, சபை, ஆர்ப்பாட்டம் போன்ற சமூக கூட்டங்கள் எதுவும் நடத்தக்கூடாது. இத்தகைய சமூகக் கூட்டத்தில் அதிகபட்சமாக பங்கேற்பாளர்கள் பத்து நபர்களைத் தாண்டக்கூடாது. அத்தகைய கூட்டத்தில் பங்கேற்பவர்கள் முக கவசம் உள்ளிட்ட அனைத்து சமூக விலகல் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Corona regulations extend until next year ..! Kerala Government Action Notice

கடைகள் மற்றும் பிற அனைத்து வணிக நிறுவனங்களிலும், ஒரு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நபர்கள், வாடிக்கையாளர்கள் அறையின் அளவைப் பொறுத்து இருபதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.கடையில் உள்ள அனைத்து நபர்களும் வாடிக்கையாளர்களும் முககவசம் உள்ளிட்ட அனைத்து சமூக இடைவெளி விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கிருமிநாசினி திரவம் வழங்க வேண்டும்.

Corona regulations extend until next year ..! Kerala Government Action Notice

எந்தவொரு நபரும் பொது இடங்களில், சாலை அல்லது நடைபாதையில் துப்பக்கூடாது.மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் வேறு எந்த நாட்டிலிருந்தும் கேரளாவுக்குச் செல்ல விரும்புவோர் அனைவருமே தொடர்புகளை கண்டுபிடிப்பதற்கும், தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், தொற்றுநோய் பரவுவதற்கான திறனைக் குறைப்பதற்கான பிற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வலைதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.பொது மற்றும் தனியார் துறைகளால் கேரளாவிற்குள் வரும் மற்றும் கேரளாவிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாநில சாலை போக்குவரத்தின் வழக்கமான செயல்பாடு இடைநிறுத்தப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios