Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு.. புதிய தளர்வுகள் என்னென்ன? எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது? முழு விவரம்.!

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள், தனியார் பொருட்காட்சிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Corona curfew in Tamil Nadu .. What are the new relaxations?
Author
Chennai, First Published Oct 14, 2021, 6:15 PM IST

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள், தனியார் பொருட்காட்சிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.631. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை. நாள்: 05.10.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் 13.10.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, தனிமனித இடைவெளியினைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்வதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் ஏற்கெனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11.00 மணிவரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நவம்பர் 1ம் தேதி முதல் பின்வரும் செயல்பாடுகளுக்கு அனுமதி;-

*  மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்

* தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கோவிட் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்

* மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதி

* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

* திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios